12
இடமஞ்சி, பல அருமையான விளக்கங்களை, நிகழ்ச்சிகளை என்னால் இந்த முன்னுரையில் எடுத்துக் கூற இயலவில்லை. உன்னுடைய நண்பர்களைச் சொல், பிறகு நான் உன்னை மதிப்பிடுகிறேன்’ என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு.
கி.ஆ.பெ. அவர்களுடைய நண்பர்களை இப்புத்தகத்தில் படித்தபிறகு, இந் நூலாசிரியர் எவ்வளவு பெரியபாரம்பரியத்திற்குச் சொந்தக்காரர் என்பது விளங்குகின்றது. சரித்திரப் புகழ்பெற்று, நம் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் தமிழகப் பெரியவர்கள் பலர், கி.ஆ.பெ. அவர்களுடைய நண்பர்கள். இப்பெரியவர்கள் வளர்த்த நட்பு எனும் அந்தப் பண்பை இக்காலத்தில் பலர் நன்றாகப் படித்துணர வேண்டும். உதட்டளவு பேசி, உதவாத, விஷயங்களுக்காக வாதிட்டு,நெஞ்சில் வஞ்சத்தை ஏந்திச் செல்லும், இனங் கண்டு கொள்ள முடியாத மனிதர்கள் உலவும் இவ்வேளைகளில், உற்ற நண்பர்கள் யார், எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள், கருத்து. வேறுபாடு இருப்பினும், காழ்ப்புணர்ச்சியற்று எப்படி அன்பு செலுத்தினார்கள் என்பன போன்ற உயரிய, பண்புகள் இப்புத்தகத்தில் நிரம்ப அடங்கியுள்ளன.
இதைப் படிப்போர் பயனுறுவார்கள். படித்து, பலருக்கு எடுத்து விளக்கினால், சமுதாயம் பயனுறும். இத்தகைய சீரிய நூலை எழுதிய முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. அவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். வணங்குகிறேன்.
அன்புள்ள,
பு. ரா. கோகுலகிருஷ்ணன்
சென்னை,
1–1–84