இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மண்ணிடை விரிந்த வானிடைச் சூழ்ந்த
மழைகுளிர் வாடையை வீழ்த்தி
விண்ணிடை எழுந்த புதுக்கதிர் கண்டோம்! வெளியெலாம் விளைவினைக் கண்டோம்! பண்ணிடைக் கலந்த தமிழ்ச்சுவை போல
மனத்திடைப் பரந்ததே இன்பம்!
கண்ணிடை மகிழ்ச்சி, கருத்திடைத் தெளிவு
கண்டனம்! வாழ்த்துவோம் பொங்கல்!
1