இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வண்டூத நீள்கழியில்,
தாழையிலே பூமணக்க,
மறிக டல்மேல்
வண்டூதாத் தாமரைப்பூ
பொன்னிதழை மலர்த்தியதே !
வாழ்க ! வாழ்க!
கண்டோடா திருந்திடுமோ,
தமிழ்மகனே! வந்தபகை
வாடைக் காற்றும் ?
கொண்டோம்நாம் பெருமகிழ்ச்சி !
புத்தாண்டைக் கைக்கொண்டோம்!
வளத்தைக் கொண்டோம் !
1
கொல்லையிலே வாழைபலா
மாங்கனிகள் குலுங்கும் ! நீள்
கரும்ப ழைக்கும் !
நெல்லரியோ வந்தகதிர்
நிறங்கண்டு தலேதாழ்த்தும் !
ஊரோ ரத்துக்
கல்லருவி முழவார்க்கும்!
காடெல்லாம் பூச்சிரிக்கும் !