எழில் விருத்தம்
25
ஈன்றவள் பிள்ளை காத்தே
இருப்பினும் சிறிது போழ்து
தோன்றுவாள்; இமையை மூடித்
துயின்றுபின் எழுவாள்; நீயோ
ஈன்றவள் தனக்கும் தாயாய்
இமைநொடி மூடல் இன்றி
ஆன்றதை விளக்கி ஊக்கும்
அணிநகர்க்(கு) அன்னை ஆனாய்! .................................. 6
வீட்டினில் அறிவு மிக்க
மேலவள் மாமி வாழ்ந்தால்
வீட்டினில் ஒழுங்கு நேர்மை
மிகுந்திடும் என்பர் மேலோர்;
கூட்டினில் இருந்து கொண்டே
குடியினை ஊக்கி நாளும்
ஆட்டிடும் பெரிய மாமி
மணிக்கூண்டே ஆனாய்! வாழி! ...................................... 7
தன்னலம் சிறிதும் எண்ணாத்
தகைமையால் உழைக்கும் சான்றோர்
மன்னிய புகழைப் போல,
மணிக்கூண்டே! உன்றன் ஓசை
எந்நாளும் நீண்ட தூரம்
இருப்பவர் அறிவர்; ஆனால்
உன்னைப்போல் மேலோர் எல்லாம்
நீண்டநாள் உயிர்த்த துண்டோ? ....................................... 8