124
தும்பைப் பூ
"இதற்குள் மறந்து விட்டதா?" என்று வினவிய மாசிலாமணி முதலியார், பாவம்! உங்களுக்கு எத்தனையோ வேலைகள், கவலைக்கோ கணக்கில்லை. இந்நிலையில் எந்த விஷயந்தான் உங்களுக்கு எப்படி ஞாபகமிருக்கும்? இந்த நிமிஷத்தில் நினைத்தது அடுத்த கணத்தில்.." என்று அளந்து கொண்டே போனார்.
சரி. சரி; முதலியார்வாள்! நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லுங்கள்' என்று சகானந்தம் பிள்ளை இடை மறித்துக் கூறினார்.
மாசிலாமணி முதலியார், "சொல்லத்தானே போகிறேன்!" என்று கூறியவாறு மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேல் உத்தரீயத்தின் முனையால் துடைத்துப் போட்டுக் கொண்டு, சிவன் வாசிக்கும் கல்லூரியில் நம்ம மைத்துனனின் பையனொருவனும் படிக்கிறான். சச்சிதானந்தம் என்பவனை உனக்குத் தெரியுமோ, சிவா...'
சிவகுமாரன் வாயைத் திறக்கவேயில்லை.
மாசிலாமணி சுதாரித்துக் கொண்டு, "உனக்கு எப்படித் தெரியும்? அவன் கீழ் வகுப்பு. ஆயிரம் பேருக்கு மேல் படிக்கும் கல்லூரியில் யாரை யார் தெரிந்து கொள்ள முடியும்? ஒரே வகுப்பில் படிப்பவர்களிலேயே எல்லோரையும் தெரிந்து கொள்ள முடியாதே! அப்படியிருக்க...... ’’ என்று இழுத்தார்.
சதானந்தம் பிள்ளைக்கு இவருடைய பேச்சின் போக்கு சிரிப்பை வருவித்தது. ஆனலும் அவர் அதை அடக்கிக் கொண்டார்.
மாசிலாமணி முதலியார் மீண்டும் ஆரம்பித்தார். ஆனால், அண்ணா! நம்ம சிவனே, அந்தக் காலேஜிலுள்ள எல்லோருக்குந் தெரிந்திருக்கிறது. அவனுடைய தீட்சணிய புத்தியையும் திறமையையும் புரொபஸர்களெல்லாம் கூடப் பாராட்டுகிறார்களாம்."