42
இருகல்லுங் கூடி விலையில் விற்றால் ஒவ்வொன்று
ஏழுநூறு பொன்னுக்கு விற்கலா மென்றான் - இப்படி கல் விளையுந் தேசம் அங்கே
இருக்குதோ மறவருட புவனத்தி லவுண்டி இப்படி கல்லு பெருத்தா லவுண்டி என்பேச்சை எள்ளளவுங் கேள்ப்பானோ அவன்தான் அடிக்கிறேன் மறவன்மேல் छा}ि நாளை
பிடிக்கிறேன் திருப்புவனக் கோட்டைதனை பாதர் முடிக்கிறேன் சம்பிரதாயம் லவுண்டி - என்று
முழுநீல கானுதுரை தழுவணையிற் சாய்ந்தான்
மாஷா கூறல்
பொருப்புலவுந் துரை கானுசாய்பே உந்தன் புகழ்பெற்ற மனையாட்டி சொல்லுகிறேன் கேளு
திருப்புவனம் வேணுமென்று கேட்டால் நானும்
பூரீதனம் போல வாங்கித் தருகிறே னென்றாள்
இப்படி மாசாவுஞ் சொல்ல அப்போ
இயல்பாக கான்சாயபு யேது சொல்வானாம்
கான்சாகிபு கூறல்
பெண்சாதி மானியந் தனிலே லவுண்டி
பதம் பெற்றதுரை கானு ஆள்வேனோ தேசம் நாளைக்கே யொரு பளித்தா தீர்த்து நானும்
வாங்குவேன் திருப்புவனக் கோட்டை நான்சிங்கம் மண்டியே வொரு பளித்தா தீர்த்து நாளை
வாங்குவேன் மறவருட பாத்திப னுரென்றான், மாலான கானதுரை சொல்ல நல்ல
மங்கையர் சிகாமணி மாசாவுக் கப்போ கோபங்கள் சொல்ல முடியாது 拉仔母{门 குவளை விழி சிவப்பேறிச் சகைதனிலே நின்று 'இராவணனாய் நீவந்து பிறந்தாய் அதற்கு
இராம சாமியாகப் பிறந்திட்டான் மறவன் சூரனாய் நீவந்து பிறந்தாய் சிவ
சூரனாய் நீவந்து பிறந்தாய் - கோரமிகு கஞ்சனாய்ப் பிறந்தாய் அவனைக்
கொன்றதோர் கிருஷ்ணனாய் பிறந்திட்டான்
-
47.அ புராணங்களில் கதாநாயகர்களான தெய்வங்களின் எதிரிகளை வரிசைப்படுத்தி கான்சாகிபுவுக்கு உவமையாக மாஷா கூறுகிறாள். இது போலவே மதுராவிஜயம் என்னும் நூல்
கங்காதேவி மதுரை சுல்தான்களைப் புராணங்களில் வரும் அகரர்களுக்கு ஒப்பிடுகிறாள்.