52
52
வாட்டி இத்தேக் குடிச்சுப் பாரு; என்னா சுகம் தெரியுமா?... அப்புறம் நீ இத்தே விடவே மாட்டே. நெதக்கும் வாங்கியாரச் சொல்லுவே. இந்தா குடி...’’ என்று அவள் வாயருகே மதுவை கெரண்டு போனான். *
'சீ... மானங்கெட்ட மனுசா! நீ ஒண்டி குடிக்கிற போதே பாதி நாளைக்குப் பட்டினியாலே சாவறோம். என்னையும் வேறே குடிக்கச் சொல்ல றியா!' என்று அவன் கையிலிருந்த கலயத்தைப் பிடிங்கி விசி எறிந்தாள்.
அது எங்கோ நின்று கொண்டிருந்த சுடலை தலைமீது போய் விழுந்து நொறுங்கவுமே, அவன் பாய்ந்து கொண்டு விவரம் புரியாமல் பொன்னி யைப் பிடித்துக் கொண்டான்.
உடனே பாய்ந்து கொண்டு வந்த பக்கிரி சோமாறி, விடுடா அவளை; எவளோ உன் தலைமேலே கலையத்தைப் போட்டது க்கு என் பெண் சாதி மேலே எப்படிடா {X}} @ #DIL வெப்பே...??? என்று ஓங்கி ஒரு குத்துவிட்டான்.
சற்று தேரந்திற்கெல்லாம் இருவரும் கட்டிப் புறளத் துவங்கவுமே, பூவாயி,பொன்னி,மூக்காயி, குப்பம்மா, எல்லோருமாகத் தலையிட்டு அவர் களைச் சமாதானப்படுத்திப் பிரித்து விட்டனர். பிறகு அவர்களை நோக்கி பூவாயி கூறினாள்: