இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
170
கம்பன் சுயசரிதம்
நாமென்றும் நமதென்றும்
நாடுகின்ற பொருள்போகம்
விரிந்து பறந்திருக்கும்
வியன் கடலைக் கண்டதுமே
கரிந்த வினையதுபோல்
கழன்றோடிப் போயினவே.
எல்லை அறியாது
இரவெல்லாம் உறங்காது
அல்லும் பகலுமெல்லாம்
அலுக்காது தான் புரண்டு
அணியணியாய் அலைவீசி
அழகாய்த் திரண்டுருண்டு
தணியாத வேட்கையுடன்
தக்க இசைபாடி
முத்தோடு பவளமதை
முன்னிக் கடலொதுக்கி
தத்தை மொழியார்க்கு
தனித்த கலனாக்கி,
வண்ணக் கடல் தழுவி,
வானவளை யந்தொட்டு
விண்ணினையே வியப்பாக்கும்
விந்தைகளும் எத்தனைதான்.
ஆதியோடு அந்தம்
அற்ற கடல்பரப்பு
ஆதி பரம்பொருளின்
அழகான காட்சியன்றோ?
காலைக் கதிரவனும்
கண்விழித்து ஓடிவந்து
கீழைக் கடலிலிருந்து