இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பதிப்புரை
வாழ்கின்றார் விந்தன்!
விந்தைகள் நிறைந்ததே உலகம். மனிதர்களிலும் விந்தையானவர்கள் உண்டு. கோவிந்தன் விந்தன் ஆனதும் ஒரு விந்தை!
அச்சுக் கோப்புத் தொழிலாளியான ஒருவர் சிலம்புச் செல்வரானார்: ம.பொ.சி! மற்றொருவர் சிறுதைச் செல்வரானார்! சிறந்த எழுத்தாளரானார்! சிந்தனைச் சிற்றுளியானார்! அவரே (கோ)விந்தன்!
மனித மந்தையில் மாறிய மனிதன்! மாறுதலான மனிதன்! மனிதச் சந்தையில் மாறாத அவலங்களை மனத்தில் குத்தும் முட்களாய் எழுதி எறிந்தவர்!
தடித்த தோலினரையும் தைத்துத் துளைக்கும் அம்புகளை எழுத்து அரும்புக ளாக்கியவர்.
துன்ப துயரங்களைத் துளித்துளிச் சொற்களில் தொடுத்தவர்; தொகுத்தவர். க்ண்ணில் பட்ட காட்சிகளை, மண்ணில் நடக்கும்
சூழ்ச்சிகளை, மனப்புண்ணில் எழுந்த எரிச்சல்களை