து அா திருவருணேக் கலம்பகம்
முடிதேடி அறிவல் என - கிருமுடியைத் தேடி வருவேனென்று, முது அண்டம் மிசை பறந்தும் - பெரிய ஆகாயத்தின்மேல் பறந்து சென்றும், காண்அரிய - பார்த்தற்கரிய, ஒரு பொரு காாய் - ஒப்பற்ற பரம்பொருளாய், களங்கம் அற விளங்கு - தாய்மையாக விளங்குகின்ற, பெரு சோனகிரி என - பெரிய செங்கிறம் பொருங்கிய மலையென்று சொல்லும்படி, நிறைந்த சுடர் ஒளியாய் - நிறைந்தருளிய அக்கினிப் பிரகாசமாய், தின் றருள்வோய் - கின்றருள்பவனே !
கேட்டருள்வாயாக என்ற சொல் எஞ்சிநின்றது. மணி என்பது மங்கலச் சொல். என்னே ? : சீர்மனி பரிதியான ’ என்ற நிகண்டுச் செய்யுளா னுணர்க. மதுாைக் கலம்பகத்தில் மணிகொண்ட எனக் கடலைச்சுட்டி இவ்வாறே மங்கலச்சொல் தொடங்கி யுள்ளார். கடல் இரத்தினகரம் ஆகலின் இவ்வாறு கூறினர். மணி - முத்தும் பவளமுமாம். கவ ரத்தினங்களும் உள என்பது ஒன்பான் மணிகிடந்து இமைக்கு ரோல் ' என்ற திருவிளையாடற் புராணத்தா னுணர்க. கடல் - (ஈண்டு) திருப்பாற்கடல். கண்ணுறங்கல் - அறிதுயில் கொள் ளல்; அதாவது யோக விக்கிசை. மாதவன் - இலக்குமி நாயகன். தாமரை மலர் - (ஈண்டு) கிருமாலுக்தியந் தாமரை மலர். சதுர் என்பது சது எனக் கடைகுறைந்தது. சதுர்முகன் - நான்கு முகங்களை யுடையவன். களங்கமற என்பதற்கு அவ்விருவர் களின் செருக்காகிய குற்றம் நீங்கும்படி எனினுமாம்.
திருமால் கிருவடியை யறிவேனென்று பன்றி வடிவங் கொண்டு பூமியைத் தோண்டிச் சென்றும், நான்முகன் திரு முடியை யறிவேனென்று அன்னப்புள் வடிவங்கொண்டு விண் மிசைப் பறந்தும் காண்பதற்கரிய ஒப்பற்ற பொருள் திரு வண்ணுமலை என்பது விளக்கப்பட்டது. இவ்வரலாற்றை
அருணுசலபுராணம் கிருமலைச் சருக்கத்தா லறிக.