பக்கம்:தமிழர் வரலாறும் பண்பாடும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களது பாடல்கள் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு பாடப்படுகின்றன. வங்கத்து வைஷ்ணவர்கள் இராமானுஜரது பாஷ்யத்தைப் போற்றுகிறார்கள்.

ரிக் வேதத்தில் 500 தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்று டாக்டர் கமில் ஸ்வலயில் கூறுகிறார்.

தமிழ் நாட்டுக் கோவில் அமைப்பில் கோபுரங்கள் சாளுக்கிய சிற்பக் கலையிலிருந்து தோன்றியவை.

பூவினாலும் புகையினாலும் பூசை செய்யும் முறை தமிழ் நாட்டிலிருந்து வடநாட்டிற்குப் பரவியது.

மதுரையிலும், காஞ்சியிலும் படித்துப் புகழ் பெற்ற பெளத்த பிக்ஷுக்கள் மக்கள் நாளந்தாவிலும், பாடலிபுரத்திலும், ஆசிரியர்களாகப் பணியாற்றினர்.

இவ்வாறு இணைப்புப் பெற்ற இந்தியப் பண்பாட்டில் இது உயர்ந்தது. இது தாழ்ந்தது என்பதில்லை. நாம் கலைச் செல்வங்களை வழங்கியுமிருக்கிறோம் உடன் பிறந்தாரர்களிடம் கலைச் செல்வத்தைப் பெற்றும் இருக்கிறோம்

தமிழ் உணர்வு தமிழ் பண்பாட்டு ஆர்வம் தமிழ் நாட்டுப் பற்று இவை தேசிய உணர்விற்கு முரண்பட்டன அல்ல. ஆனால் தமிழ் வெறி, தமிழர் மற்ற இனத்தாரினும் எல்லாவகையிலும் சிறந்தவர் Regional Chavinism என்ற கருத்து, தேசிய ஒற்றுமைக்கும் தமிழர் பயன்பாட்டிற்கும் நேர் முரணானது.

60