இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கடவுள் என்பது கயவர்கள் கற்பனை
காசிக்குப் போவது காசுக்கு நட்டமே
கிளர்ச்சிகள் இன்றி வளர்ச்சிகள் இல்லை
கீதை உன்னைக் கீழ்மகன் ஆக்கும்
குட்டக் குட்டக் குனிபவன் முட்டாள்
கூடி ஒற்றுமை கொள்கையில் காண்பாய்
கெட்டாலும் மானம் விட்டுக் கெடாதே
கேள்வி ஞானமே கேடிலா ஞானம்
கைம்பெண்ணாயினும் கட்டு தாலியை
கொடுப்பவன் எல்லாம் கொடை வள்ளல் ஆகான்
கோயில் இல்லா ஊரில் நீ குடி இரு