உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காத்தவராயன் கதைப்பாடல்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறமது விளங்கிடும் ஆட்பாடி தன்னில்

அழகுகருப் பாயியென்று

அவளும் பிறந்திடயான் அவ்விடம் சென்றவள்

தயிர்மோர் குடித்தேன்

நிரையுடன் புத்துரில் வாழ்கின்ற வண்ணுர

நல்லியன்றே பிறந்தாள்

நின்றவள் மனசென்று பால்வாங்கி மாலைக்கு

நெறியுடன் கொடுத்துவந்தேன்

சிறையுடன் பாவாணர் புகழ்கின்ற பாச்சூரில்

திறமுடைய பூவாயியாய் சென்றுமவள் பிறந்திட யானவ்விடம் சென்று

திறமுடன் மதுகுடித்தேன்

உரமுடன் சொல்லுகிறேன் உத்தமனே தூண்டியும்

உறுத்தவே வாடிநிற்பேன்

உயிர்க்கழுவில் இருக்குமல் வேளையில் இடைக்குலம்

உதித்திடும் நல்லதங்காள்

தாகமுடன் மோர்கொண்டு என்தாகமது தணித்திட

தையலொருத்தி யாய்வருவாள்

தானெழுவர் கன்னியுடன் சாபமது பெற்றுயான்

தாரணியில் வந்தவாரே

காத்தவளுர் சொன்னதையும் கண்டுமிக ராசாவும ஏத்தமுள காத்தவனே இன்பமுடன் கொண்டாடி

காரியக் காரர் கணத்தசபை மந்திரிகள் சீரிய சந்தோஷமுடன் சிறப்பு மிகவருளி

அந்தப் பிழைபொறுத்து ஆள்கடுமை கொண்டது போல் இந்தப் பிழைதனநாம் இப்போதுதான் பொறுத்தோம் பருவமுடன் கூடியதோர் பாவையாள் தன்னுடனே

திருவரங்கம் பேட்டை தலத்தில் எழுந்தருளி

மாயுைடன் நீரும் வையகத்தில் எந்நாளும் சாலவே வாழ்ந்திருங்காண் தம்பி பரிமண்மே.