பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தனித்தமிழ்க் கிளர்ச்சி


சென்னை தமிழருக்கே

முன்னைநாள் தொட்டுமே மொய்த்துத் தமிழர்வாழ்
சென்னை தமிழருக்கே சேரவேண்டும் அம்மானை
சென்னை தமிழருக்கே சேரவேண்டின் ஆந்திரர்கள்
முன்னித் தமதாக்க முயலுவதேன் அம்மானை
முயலவே விட்டால்நாம் மூடராவோம் அம்மானை (83)

தனித்தமிழ்க் கிளர்ச்சி

அன்றுபோல் நம்தமிழர் ஆக்கங்கள் பலபெற்று
என்றுமே இன்பமுடன் இருக்கவேண்டும் அம்மானை
என்றுமே இன்பமுடன் இருக்கவேண்டின் தமிழர்க்கு
இன்று தமிழ்நாட்டில் என்னவேண்டும் அம்மானை
தனித்தமிழ் நற்கிளர்ச்சிதான் வேண்டும் அம்மானை (84)


82,83,84 - தமிழ் நாட்டில் வடஎல்லை திருப்பதி, தென்னெல்லை குமரி. இது பழைய நூற்களிற்கண்ட உண்மை. எனவே, இவ்வெல்லைக் குட்பட்ட சென்னையை ஆந்திரர் தமதாக்க முயல்வது மிகக் கொடுமை. தமிழர் அறநெறியில் தனித்தமிழ்க் கிளர்ச்சி செய்யவேண்டும்.