பக்கம்:திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42


அளியன் றானே முதுவா யிரவலன்
285வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென
இனியவு நல்லவு நனிபல வேத்தித்

தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்
வான்றோய் நிவப்பிற் ருன்வந் தெய்தி
அணங்குசா லுயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
290மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி
அஞ்ச லோம்புமதி யறிவனின் வரவென
அன்புடை நன்மொழி யளைஇ விளிவின்
றிருணிற முந்நீர் வளைஇய வுலகத்
தொருநீ யாகித் தோன்ற விழுமிய

295பெறலரும் பரிசி னல்குமதி பலவுடன்
வேறுபஃ றுகிலி னுடங்கி யகில்சுமந்
தார முழுமுத லுருட்டி வேரற்
பூவுடை யலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
300தண்கம ழலரிறால் சிதைய நன்பல