உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுவைக் கவிஞர் பாரதியார்-ஒரு கண்ணோட்டம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுப்பிரமணிய பாரதியார் : ஒரு கண்ணோட்டம் 93 வளிலும் ஜனநாயகக் குரலிலும் கவரப் பெற்றவர் பாரதியார், விட்மெனைப் பற்றி அவர் கூறுவார்', ‘இவருடைய பாட்டில் புதுமை என்னவென்றால் இது வசன நடைபோலத்தான் இருக்கும். எதுகை, மோனை, தளை ஒன்றுமே கிடையாது. எதுகை மோனை இல்லாத கவிதைதான் உலகத்திலே பெரிய பாஷைகளில் பெரும்பகுதியாகும். வால்ட்விட்மென் கவிதையைப் .ெ பா ரு வளி ல் காட்டவேண்டுமே யல்லாது சொல்லடுக்கில் காட்டுவது பிரயோசன மில்லை என்று கருதி ஆழ்ந்த ஒசை மாத்திரம் உடையதாக மற்றப்படி வசனமாகவே எழுதி விட்டார்.' பாரதியார் காலம்வரை கவிதை புலவர்களிடமும் பண்டிதர்களிடமும் சிக்கித் தவித்தது. கவிதை செய்யுள் வடிவில்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கண விதி தான் இதற்கு முதற் காரணமாகும். இதனால் கவிதைப் பண்பு மறைந்து யாப்பே முந்திரிக்கொட்டைபோல் முன்னின்று தரிசனம் தந்தது. பாரதியார் புலவர்களின் கடுமையான நடையை-தேர்வடம் போன்ற விறைப்பான தமிழ் நடையை-இவ்வாறு கண்டனம் செய்வார்: 'அருமையான உள்ளக் காட்சிகளை எளிய நடையில் எழுதுவது நல்ல கவிதை, ஆனால், சென்ற சில நூற்றாண்டுகளாகப் புலவர்களும் சாமியார் களும் சேர்ந்து வெகு சாதாரணமான விஷயங்களை அசாதாரண அலெளகிக அந்தகார நடையில் எழுது வதுதான் உயர்ந்த கல்வித்திறமை என்று தீர்மானம் செய்து கொண்டார்கள்' 1. பாலா-புதுக் கவிதை - ஒரு புதுப் பார்வை - பக்-41 இல் காட்டப்பட்டது. 2. டிெ-பக் 42.