இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
22
ராசீ
'நாலுபேர் படித்தால் போதும்; புதிய செய்திகள் சொல்ல விரும்புகிறேன். உணர்வுகளை மட்டும் வைத்து விளையாடவில்லை'.
உண்மைகளை உணர்த்த விரும்புகிறேன்.
'மர்ம நாவல்கள் எழுதுங்க' என்றான்.
‘'எதுக்கு'
'அதற்குத்தான் வரவேற்பு' என்றான்.
'ஒவ்வொரு எழுத்தும் மர்ம நாவல்தான். எப்படி
முடியும் என்று யாகும் கூறமுடியாது. அது வரை எதுவும் மர்ம நாவல்தான்'.
'யாரை வைத்து எழுதுவீர்கள்' என்றான்.
" உன்னை வைத்துத்தான்' என்றேன்.
அவன் சிரித்தான்.
-5
உங்களுக்குக் கதை வேண்டுமா எதிர் வீட்டுப் பையனும் அந்த ரிசப்ஷனிஸ்டு பெண்ணும் காதலிக்கிறார் கள். அதை வைத்து எழுதுங்கள் கதை' என்றான்.
'அவள் ஒரு படித்த பெண். அவன் ஒரு கிறிஸ்தவ இளைஞன். வங்கியில் நிரந்தரமான வேலை. அவனுக்கு நிச்சயம் சில லட்சங்கள் வரும். இங்கே அவள் லட்சியங் களைப் பற்றிப் பேசுவாள். அந்தக் குப்பை கூட்டும்