உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


அதற்காக அதை ஒரு
சான்றாகக் கொண்டு அவளை
அழைத்து வாழ்வு துவக்கினான்.

மிதிலையில் சானகி

புதிய ஊர் ; தெருக்கள் பல ;
வீதிவழியே நடந்தவன்
சற்று அண்ணாந்து பார்த்தான்.
வாலிபர்கள் அவர்கள் பார்வை
துருதுருப்புக் கொண்டது ;
வண்ணங்கள் பட்டால் அவர்கள்
எண்ணங்கள் சிதறுவது
இயல்பு ; இராமன் விதிவிலக்கு
அல்ல ; சீதை அவள் கண்ணில் பட்டாள்.

முதற் பார்வையே இருவரையும்
கவர்ந்தது ; இருவரும் இதயம்
இடம் பெயர்ந்தனர் ; காதல்
அவர்கள் இருவரையும் பிணைத்தது.

வில்லை முறித்து அவன் மணந்தான்
என்று மட்டும் கூறி இருந்தால்
அது அவனுக்குப் பெருமை
சேர்த்து இருக்க வாய்ப்பு இல்லை

காதலித்தவளையே அவன்
மணம்முடித்தான் என்பது சிறப்பு;
அதற்காக அவன் வில்லை முறித்தான் ;