பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

ஐந்தாம் பகுதியில் குன்றக் குரவை நிகழ்ச்சிகளும் முருகனை வழிபடும் மகளிரின் இயல்பும் கூறப்படுகின்றன.

ஆறாம் பகுதி, முருகன் எழுந்தருளியிருக்கும் இடங்களையும், முருகன்பாற் சென்று அருள் பெறும் வழியையும், அவன் அருள் புரியும் திறத்தையும், பழமுதிர்சோலையில் உள்ள அருவியின் சிறப்பையும் கூறுகிறது.

முருகனது திருமேனியின் புனைந்துரை அழகிய சொல்லோவியமாக அமைத்துள்ளது.

'உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டா அங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன் தாள்
செறுர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை'

2. பொருநர் ஆற்றுப்படை

இது 248 அடிகளைக் கொண்டது; வஞ்சியடிகள் விரவிய ஆசிரியப்பாவால் அமைந்தது. பரிசில் பெற விரும்பும் பொருநனைப் பரிசில் பெற்ற பொருநன் ஒருவன் கரிகாற் சோழனிடம் ஆற்றுப் டுத்திப் பாடிய பாடல் இது. இதனைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார் என்பவர்.

இதில் பொருநர்கள் விழவின்கண் ஒன்று கூடித் தம் இசைத்திறனைக் காட்டுகின்றனர்; அவ்விழா முடிந்ததும் வேற்றூரை நோக்கிச் செல்கின்றனர்,

பாலையாழின் வருணனையும், பாலைப்பண்னைக் கேட்டு ஆறலை கள்வரும் தம் கொடுஞ்செயலை மறந்து அன்பு காட்டும் திறமும் இதில் கூறப்படுகின்றன. விறலியரின் கேசாதி பாத வருணனை போற்றத்தக்கது.

கரிகாலன்பால் பொருநர் பொற்றாமரை பெறுதலும்