உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மனிதரைக் கண்டு கொண்டேன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்வோம் தொண்டு

மூவாத் தமிழுணர் மு.வ. தமக்குச் சாவா? அச்சொலைச் சற்றும் நம்பிலோம்; விடிந்தது பொழுது தொடர்ந்தது செய்தி, படர்ந்தது துயரம்; நடந்தது கொடுமை! சரியா மனத்தர் சரிந்தனர் எனுஞ்சொல் சரியா? பிழைபிழை; சாவே பிழைபல புரியா நின்றனை புரியா மதியால்; பெரியார் அறிஞர் பெரும்புல வோர்கள் எவரே யாகினும் எழும்நின் பசிக்குத் தவறார் கொல்லோ தடுப்பே இலையோ? ஆம்ஆம் இயற்கையின் ஆற்றலை அறிவோம்; அறிவோம் ஆகினும் ஆற்றாத் துயரால் சிறிதே மறந்தனம் சிந்தையும் மயங்கினம் உயிர்தான் பிரிந்தது; உடல்தான் மறைந்தது; செயலும் செயலால் செழித்தநற் றமிழும் உண்டிவன் அன்றோ? ஒண்மையர் அவர்தம் தொண்டினை இன்னே தொடருதும் யாமே.