இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அப்பரடிகள்
திருத்தலங்கள் பலசென்று, கசிந்து நின்று
திருவாயால் தேவாரம் பாடி வந்தார்; உருக்குலைந்த இடமெல்லாம் தூய்மை செய்ய
உழவாரப் படையொன்று கையிற் கொண்டார்; அருத்தியொரு ஞானப்பால் உண்ட வாயால்
அப்பரெனச் சம்பந்தன் அழைக்க நின்றார்; திருத்தமுற நடையறாத் துறவு பூண்டார்;
திருநாவுக் கரசரெனப் புகழும் பெற்றார்.
வெப்புறுத்திக் கடலுக்குள் கட்டி வீழ்த்தி,
வேதனைக்குள் தள்ளிடினும் கொள்கை மாறா அப்பருக்குச் சமமாக ஒப்பு ரைக்க
ஆளில்லை; சமயங்கள் பலவுந் தோய்ந்து தப்பறுக்கும் நிலையுணர்ந்த தரும சேனர்;
தவமுனிவர், வேளாளர், தகுதி மிக்கார்; அப்பழுக்கே இல்லாத ஒழுக்க சிலர்:
அவர்கொண்ட தொண்டுள்ளம் வாழ்க வாழ்க.