இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
| 4.
கம்ப நாட்டில்...
எண்சீர் விருத்தம்
கம்பனைஓர் சக்ரவர்த்தி என்று சொன்னார்
கனன்றெழுந்தேன் முடியரசன் ஆனதாலே, வெம்பியெழுந் தார்ப்பரித்தேன் தோள்கள் தட்டி
வீரரெலாம் வருகவெனக் கூவி நின்றேன். தெம்புடைய என்மறவர் போர்வி ருப்பால்
தினவெடுத்த திண்டோளர் திரண்டு வந்தார்: நம்பியவர் துணையாக என்றன் வீரம்
நாட்டுதற்குப் படையெடுத்தேன் கம்பன் நாட்டில்.
கனன்றெழுந்து படையெடுத்த என்முன் கோட்டைக்
கதவடைக்க வில்லை.அதைத் திறந்தே வைத்தான்; முனைந்தெழுந்து காவல்செயும் வீரர் இல்லை;
முற்றுகையைத் தடுக்கின்ற படையு மில்லை; சினந்தெழுந்த என்னுடன்போர் செய்ய அஞ்சிச்
செயலற்று நின்றனனோ கம்பன் என்று நினைந்தெனது படைதொடர உட்பு குந்தேன்
நிறைந்தொளிரும் அமைதியையே அங்குக் கண்டேன்.