பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கோட்டம் 123 கவியரசர் முடியரசன்

போர்முனையில் வாரிவிடும் குதிரை போலப் புகுந்திடர்கள் சூழுங்கால் ஒடி விட்டுச் சேர்பொருள்கள் மிகுபொழுதில் குழைந்து வந்து சிரித்துவிளை யாடிமகிழ் நண்பரில்லை; தார்புனையும் வில்வணக்கம் போல்வ ணங்கும் தந்திரஞ்சேர் சொல்வணக்கம் செய்வாரில்லை; நேர்மொழிகள் பலபேசி வினைகள் வேறு நிகழ்த்துகிற நட்பினரும் அங்கே யில்லை.

நகையேயும் பகை வேண்டார்:புலமை தோய்ந்த நயமிக்க சொல்லுழவர் பகைமை வேண்டார்; பகைமையையும் நட்பாக்கிப் பழகு கின்ற பண்புடையார் நயவஞ்சம் சிறிது மில்லார்; மிகைசெய்து தம்முரார் பகைமை கொள்ளார்; மேலோரைப் பழித்துரையார், பிறன்பொ ருட்குத் தகுதியிலா ஆசை கொளார்; நாடு காக்கும் தன்மானப் பெருமையன்றிச் சிறுமை யில்லார். ~2學, 행C c2學, 행C c2學, 행C