முன்னுரை W r.
நாலறி புலவர் டாக்டர் ந. சஞ்சீவி அவர்களும் இப் பணியினை யான் ஒருவனே சிறப்புறச் செய்து முடிக்க இயலும் என்று வற்புறுத்தினர்கள். எனவே இப் பணியினை ஏற்றேன்.
நூலினைத் திருத்தமுறப் பதிப்பிப்பதில் தமிழன்பர் திருநகர்ப் புலவர் திரு. இரா. இளங்குமரன் அவர்கள் துணை நின் ருர், அவர்தம் பணி, உற்றவிடத்து உற்ற காலத்து
தவிய சால்புடைச் செயலாகும். அவர்களுக்கு நன்றி.
இந் நூல் உருவாவதற்கு மு. வ. அவர்களின் இளமைக் கால நிகழ்ச்சிகளைக் கூறிய அவர்தம் தமக்கையார் வேலம் ராஜாம்பாள் அவர்களுக்கும், திருப்பத்துரர் வாழ்க்கையினை வகையுறக் கூறிய அண்ணன் திரு. கா. அ. ச. ரகுநாயகன்; M. A. அவர்களுக்கும், மதுரை வாழ்க்கையினை வகையுறச் சொன்ன துணைவேந்தரவர்களின் நேர்முகச் செயலர் திரு. ஆர். ஆர். சத்தியமூர்த்தி B.A., அவர்களுக்கும், பெரும் பகுதி வாழ்க்கைச் செய்திகளைக் கண்ணிருடன் சொன்ன, அப்பா அவர்களுடன் உடனுறை வாழ்க்கைப் பேறு பெற்ற ராதா அம்மையார் அவர்களுக்கும் என் நன்றி உரியதாகும்.
இந் நூல் எழுத இசைவு வழங்கிய சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னுள் துணைவேந்தரும், சிற்றுார்ச் சிருரும் சீரிய உயர் கல்வி கற்கத் துணைநின்றவருமான கல்வி நெறிக் காவலர் தாமரைச் செல்வர் திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர் களுக்கும், சீர்சால் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கும் என் நன்றி உரியது.
இறுதியாக - ஆனல் முதன்மையாக - இந் நூலினைப் பதிப்பித்து வெளியிடும் திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்க்கு என் உளம் நிறைந்த நன்றியினை உரிமையாக்குகின்றேன்.
தமிழகம் சென் &ன - சி. பாலக ப்பிரமணியன்
28–4–76