t;
வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி மனையுறை புறாக்கள் . பெரும் பாணாற்றுப் படை-விளக்கவுரை ஆகிய இலக்கிய நூல்களையும், .
தமிழக வரலாறு-வரிசை என்ற பெயரில் தமிழக வரலாறு-சங்க சாலம்-அரசர்கள் தமிழக வரலாறு-கோசர்கள் தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான் ஆகிய வரலாற்று நூல்களையும் வெளியிட்டுள்ளோம்.
பதிற்றுப் பத்து விளக்கம்-எண்-6 என்ற வரிசையில் பதிற்றுப் பத்து-ஏழாம் பத்து விளக்கவுரையை
புலா அம் பாசறை என்ற தலைப்பில் இந்த நூலைத் தமிழ் கூறு நல்லுலகத்தின் முன் பன்டக்கிறோம்.
"மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் கிறீஇத் தாம் மாய்ந்தனரே' என்ற புறநானூற்று மொழிகளுக்கேற்ப, புகழுடம்பு பெற்று விட்ட புலவர் பெருந்தகை, இறவாத புகழுடைய இலக்கியங் கள் பலவற்றைத் தமிழன்னைக்கு அண் செய்ய அளித்து விட்டுச் சென்றுள்ளார். புலவர் அவர்களின் முன்னைய பட்ைப்புகளுக்குத் தமிழகத்துப் பெரியோர்களாகிய தாங்கள் காட்டிய பேரன்பையும், பாராட்டையும், ஆதரவினையும், தொடர்ந்து அளித்திட வேண்டுகிறோம். -
'தமிழுக்குத் தொண்டு செய்வார் சாவதில்லை என்றார் ப்ாவேந்தர். தம் வாழ்நாள் முழுவதும், காலம் கரம்பிடித்து அழைத்துப்போன அந்தக் கடைசி தொடிவரை, தமிழ்ப்பணி ஆற்றிய புலவர் அவர்கள் வாழ்வார்; அவர் தமிழ் உலகிற்கு அளித்துச் சென்றுள்ள இலக்கியச் செல்வங் கள் உள்ளவரை என்றென்றும் நிலைத்து வாழ்வார்: தமிழறிந்தோர் நெஞ்சமெல்லாம் நிலைத்து வாழ்வார் என்பது உறுதி. - -
- எழிலகம் பதிப்பகத்தார்