பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

தமிழ்மொழி இனிமை வாய்ந்தது. இனிமையால் இயன்ற இளமகளிர் என்ற பொருள்பட வந்த தமிழ் தழி இய சாய்லர்” என்ற தொடரில் வரும் :தமிழ் என்று சொல்லே இனிமை எனும் பொருள் தருவதாகும் எனக் கூறித், தமிழ்மொழிக்குப் tெiருந் தொண்டு புரிந்துள்ளார் சீவக சிந்தாமணி என்னும் பெருங்காப்பியப் பேராசிரியர் திருத்தக்க தேவர். -

இனிய சொற்களைத் தேர்ந்து, இனிமையாகக் செர்ல்லாட விரும்பிய தமிழர், தாம் கூற விரும்வும்: ஒவ்வொரு கருத்தும் இனிமையுடையவாதல் வேண்டும்: இன்க்கும் வகையில் உரைக்கப் பெறுதல் வேண்டும் எனவும் விரும்பினார்கள். அவ்வாறே உரை த்தும் வ ந்தார் கள்; செந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இச்சிறப்புடைய வாகும். . . . -

"உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே, ஒளி உண்டாகும்' என்றார் ஒரு பெரியார். தமிழர் வாக்கு இனிமை வாய்ந்தது என்றால், அவர் உள்ளமும், அவ் வுள்ளம் உந்த உளவாகும் அவர் செயல்பாடும், இனிமை வாய்ந்தனவே ஆகும். இது, உண்ம்ை என்பதைப் பழந் தமிழ் இலக்கியங்கள் காட்டும் படப்பிடிப்பினைக் கானும் வாய்ப் பினைப் பெற்றோர் அனைவரும் உணர்வர்.