பக்கம்:பதிற்றுப்பத்து-புலா அம்பாசறை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்த்த நம் பழம் பெரும் மூதாதையர் தம் பண்பாட்டுப் பெருமையினை இன்றையத் தமிழரும், பிறரும் அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்ற அவாவின் விளைவாக, அக்காலப் புலவர் பெருமக்கள், ஆயிரமாயிரம் பாக்களைப் பாடிச் சென்றார். கள். ஆனால், அவர்கள் பாடிச் சென்ற அப்பாக்களின் களஞ்சியத்தைக் காக்கத் தவறிவிட்டார்கள், விழிப்புணர்வு அற்ற சிலர் என்றாலும், நம் மூதாதையருள் விழிப்புணர் வோடு இருந்தவர்கள், அழிந்தன போக அழியாதிருந்த அப்பழம்பாக்களை எல்லாம், அரிதின் முயன்று தேடிக் கொண்டார்க்ள். - -

அவ்வாறு தேடிப் பெற்ற அப்பாக்களை ஊன்றிப் பயின்ற புலமைசால் பெரியோர்கள் பலரும் ஒன்று கூடி இருந்து, இப்பாக்களில் பொதிந்து கிடக்கும் பொருள் வளம் அப்பாக்களின் அடி அளவு ஆகியவற்றை அளவு கோலாகக் கொண்டு, அப்பாக்களையெல்லாம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க் கணக்கு என்ற தலைப்புகளில் தொகுத்து நமக்கு அளித்துச் சென்றனர். அவ்வாறு தொகுக்கப் பெற்ற தொகை நூல்களில், இரண்டாவது வரிசையில் நிற்பதான எட்டுத் தொகை நூல்களில் இடம் பெற்றிருக்கும் பாக்களின் நலங்களை, நம் கால மக்களும் உணர்ந்து மகிழ வேண்டும் என்ற அவாவினால் உந்தப்பட்ட காரணத்தால் அவ்வரிசையுள், முதற்கண் வைத்துப் பெருமை செய்யப் பெற்றதான , நற்றினையினை, "நற்றினை விருந்து” என்ற தலைப்பிலும், இரண்டாம் நிலை பெற்ற தாயினும், "நல்ல குறுந்தொகை” எனச் சிறப்பிக்கப் பெற்ற் தான குறுந்தொகையினைக் 'குறுந் தொகைக் கோவை' என்ற தலைப்பிலும் ஆறாவது இடம் அளிக்கப் பெற்றதாயினும் கற்றறிந்தோர் போற்றும் கவி' என்ற சிறப்பினைப் பெற்றதான கலித்தொகையினைப் 'பாலைச் செல்வி', 'குறிஞ்சிக் குமரி', 'மருத நில மங்கை'