பதிற்றுப்பத்து/ஏழாம்பத்து
Appearance
பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன்
பாடியவர்: கபிலர்
பாட்டு - 61
[தொகு]- பலாஅம் பழுத்த பசும்புண் அரியல்
- வாடை துரக்கும் நாடுகெழு பெருவிறல்
- ஓவத் தன்ன வினைபுனை நல்லில்
- பாவை அன்ன நல்லோள் கணவன்
- 5 பொன்னின் அன்ன பூவின் சிறிஇலைப்
- புன்கால் உன்னத்துப் பகைவன் எங்கோ
- புலர்ந்த சாத்தின் புலரா ஈகை
- மலர்ந்த மார்பின் மாவண் பாரி
- முழவுமண் புலர இரவலர் இனைய
- 10 வாராச் சேண்புலம் படர்ந்தோன் அளிக்(க)என
- இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன்
- ஈத்த(து) இரங்கான் ஈத்தொறும் மகிழான்
- ஈத்தொறும் மாவள் ளியன்என நுவலும்நின்
- நல்இசை தரவந் திசினே ஒள்வாள்
- 15 உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை
- நிலவின்அன்ன வெள்வேல் பாடினி
- முழவின் போக்கிய வெண்கை
- விழவின் அன்னநின் கலிமகி ழானே. (61)
- பெயர்: புலாஅம் பாசறை
- துறை: காட்சிவாழ்த்து
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 62
[தொகு]- இழைஅணிந்(து) எழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு
- மழைஎன மருளும் மாஇரும் பஃறோல்
- எஃகுபடை அறுத்த கொய்சுவல் புரவியொடு
- மைந்(து)உடை ஆர்எயில் புடைபட வளைஇ
- 5 வந்துபுறத்(து) இறுக்கும் பசும்பிசிர் ஒள்அழல்
- ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ்
- பொல்லா மயலொடு பாடிமிழ்(பு) இழிதரும்
- மடங்கல் வண்ணம் கொண்ட கடுந்திறல்
- துப்புத்துறை போகிய கொற்ற வேந்தே
- 10 புனல்பொரு கிடங்கின் வரைபோல் இஞ்சி
- அணங்(கு)உடைத் தடக்கையர் தோட்டி செப்பிப்
- பணிந்துதிறை தருபநின் பகைவர் ஆயின்
- புல்உடை வியன்புலம் பல்ஆ பரப்பி
- வளன்உடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த
- 15 களன்அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி
- அரியல் ஆர்கை வன்கை வினைநர்
- அருவி ஆம்பல் மலைந்த சென்னியர்
- ஆடுசிறை வரிவண்(டு) ஓப்பும்
- பாடல் சான்றஅவர் அகன்தலை நாடே. (62)
- பெயர்: வரைபோல் இஞ்சி
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 63
[தொகு]- பார்ப்பார்க்(கு) அல்லது பணி(பு)அறி யலையே
- பணியா உள்ளமொ(டு) அணிவரக் கெழீஇ
- நட்டோ ர்க்(கு) அல்லது கண்அஞ் சலையே
- வணங்குசிலை பொருதநின் மணம்கமழ் அகலம்
- 5 மகளிர்க்(கு) அல்லது மலர்ப்(பு)அறி யலையே
- நிலம்திறம் பெயரும் காலை ஆயினும்
- கிளந்த சொல்நீ பொய்ப்(பு)அறி யலையே
- சிறிஇலை உழிஞைத் தெரியல் சூடிக்
- கொண்டி மிகைபடத் தண்தமிழ் செறித்துக்
- 10 குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி
- ஒருமுற்(று) இருவர் ஓட்டிய ஒள்வாள்
- செருமிகு தானை வெல்போ ரோயே
- ஆடுபெற்(று) அழிந்த மள்ளர் மாறி
- நீகண் டனையேம் என்றனர் நீயும்
- 15 நும்நுகம் கொண்டினும் வென்றோய் அதனால்
- செல்வக் கோவே சேரலர் மருக
- கால்திரை எடுத்த முழங்குகுரல் வேலி
- நனம்தலை உலகஞ் செய்தநன்(று) உண்(டு)எனின்
- அடைஅடுப்(பு) அறியா அருவி ஆம்பல்
- 20 ஆயிர வெள்ள ஊழி
- வாழி யாத வாழிய பலவே. (63)
- பெயர்: அருவி ஆம்பல்
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 64
[தொகு]- வலம்படு முரசின் வாய்வாள் கொற்றத்துப்
- பொலம்பூண் வேந்தர் பலர்தில் அம்ம
- அறம்கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய
- உரைசால் வேள்வி முடித்த கேள்வி
- 5 அந்தணர் அரும்கலம் ஏற்ப நீர்பட்(டு)
- இரும்சே(று) ஆடிய மணல்மலி முற்றத்துக்
- களிறுநிலை முணைஇய தார்அரும் தகைப்பின்
- புறம்சிறை வயிரியர்க் காணின் வல்லே
- எஃகுபடை அறுத்த கொய்சுவல் புரவி
- 10 அலங்கும் பாண்டில் இழைஅணிந்(து) ஈம்என
- ஆனாக் கொள்கையை ஆதலின் அவ்வயின்
- மாஇரு விசும்பில் பல்மீன் ஒளிகெட
- ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்
- உறுமுரண் சிதைத்தநின் நோன்தாள் வாழ்த்திக்
- 15 காண்கு வந்திசின் கழல்தொடி அண்ணல்
- மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்
- இதழ்வனப்(பு) உற்ற தோற்றமொ(டு) உயர்ந்த
- மழையினும் பெரும்பயம் பொழிதி அதனால்
- பசிஉடை ஒக்கலை ஒரீஇய
- 20 இசைமேம் தோன்றல்நின் பாசறை யானே. (64)
- பெயர்: உரைசால்வேள்வி
- துறை: காட்சிவாழ்த்து
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 65
[தொகு]- எறிபிணம் இடறிய செம்மறுக் குளம்பின்
- பரிஉடை நல்மா விரிஉளை சூட்டி
- மலைத்த தெவ்வர் மறம்தபக் கடந்த
- காஞ்சி சான்ற வயவர் பெரும
- 5 வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ
- பூண்அணிந்(து) எழிலிய வனைந்துவரல் இளமுலை
- மாண்வரி அல்குல் மலர்ந்த நோக்கின்
- வேய்புரை(பு) எழிலிய விளங்(கு)இறைப் பணைத்தோள்
- காமர் கடவுளும் ஆளும் கற்பின்
- 10 சேண்நாறு நறுநுதல் சேஇழை கணவ
- பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை
- பூண்அணிந்து விளங்கிய புகழ்சால் மார்பநின்
- நாள்மகிழ் இருக்கை இனிதுகண் டிகுமே
- தீம்தொடை நரம்பின் பாலை வல்லோன்
- 15 பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்குச்
- வேறுசெய் மாரியின் அளிக்கும்நின்
- சாறுபடு திருவின் நனைமகி ழானே. (65)
- பெயர்: நாள்மகிழிருக்கை
- துறை: பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 66
[தொகு]- வாங்கிரு மருப்பின் தீம்தொடை பழுனிய
- இடன்உடைப் பேரியாழ் பாலை பண்ணிப்
- படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல
- இடிஇசை முரசமொ(டு) ஒன்றுமொழிந்(து) ஒன்னார்
- 5 வேல்உடைக் குழூஉச்சமம் ததைய நூறிக்
- கொன்றுபுறம் பெற்ற பிணம்பயில் அழுவத்துத்
- தொன்றுதிறை தந்த களிற்றொடு நெல்லின்
- அம்பண அளவை விரிந்(து)உறை போகிய
- ஆர்பதம் நல்கும் என்ப கறுத்தோர்
- 10 உறுமுரண் தாங்கிய தார்அரும் தகைப்பின்
- நாள்மழைக் குழூஉச்சிமை கடுக்கும் தோன்றல்
- தோல்மிசைத்(து) எழுதரும் விரிந்(து)இலங்(கு) எஃகின்
- தார்புரிந் தன்ன வாள்உடை விழவின்
- போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த
- 15 கடவுள் வாகைத் துய்வீ ஏய்ப்பப்
- பூத்த முல்லைப் புதல்சூழ் பறவை
- கடத்திடைப் பிடவின் தொடைக்குலைச் சேக்கும்
- வான்பளிங்கு விரைஇய செம்பரல் முரம்பின்
- இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
- 20 அகன்கண் வைப்பின் நாடுகிழ வோனே. (66)
- பெயர்: புதல்சூழ் பறவை
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 67
[தொகு]- கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
- பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்
- கடன்அறி மரபின் கைவல் பாண
- தெள்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை
- 5 கொல்படை தெரிய வெல்கொடி நுடங்க
- வயங்குகதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்பப்
- பல்களிற்(று) இனநிரை புலம்பெயர்ந்(து) இயல்வர
- அமர்க்கண் அமைந்த அவிர்நிணப் பரப்பின்
- குழூஉச்சிறை எருவை குருதி ஆரத்
- 10 தலைதுமிந்(து) எஞ்சிய வாள்மலி யூபமொ(டு)
- உருவில் பேய்மகள் கவலை கவற்ற
- நா(டு)உடன் நடுங்கப் பல்செருக் கொன்று
- நா(று)இணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணியர்
- வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்
- 15 நெறிபடு மருப்பின் இரும்கண் மூரியொடு
- வளைதலை மாத்த தாழ்கரும் பாசவர்
- எஃ(கு)ஆ(டு) ஊனம் கடுப்பமெய் சிதைந்து
- சாந்(து)எழில் மறைத்த சன்றோர் பெருமகன்
- மலர்ந்த காந்தள் மாறா(து) ஊதிய
- 20 கடும்பறைத் தும்பி சூர்நசைத் தாஅய்ப்
- பறைபண் அழியும் பாடுசால் நெடுவரைக்
- கல்உயர் நேரிப் பொருநன்
- செல்வக் கோமான் பாடினை செலினே. (67)
- பெயர்: வெண்போழ்க்கண்ணி
- துறை: பாணாற்றுப்படை
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 68
[தொகு]- கால்கடிப்(பு) ஆகக் கடல்ஒலித் தாங்கு
- வேறுபுலத்(து) இறுத்த கட்டூர் நாப்பண்
- கடும்சிலை கடவும் தழங்குகுரல் முரசம்
- அகல்இரு விசும்பின் ஆகத்(து) அதிர
- 5 வெவ்வரி நிலைஇய எயில்எறிந்(து) அல்ல(து)
- உண்ணா(து) அடுக்கிய பொழுதுபல கழிய
- நெஞ்சுபுகல் ஊக்கத்தர் மெய்தயங்(கு) உயக்கத்(து)
- இன்னார் உறையுள் தாம்பெறின் அல்லது
- வேந்(து)ஊர் யானை வெண்கோடு கொண்டு
- 10 கள்கொடி நுடங்கும் ஆவணம் புக்(கு)உடன்
- அருங்கள் நொடைமை தீர்ந்தபின் மகிழ்சிறந்து
- நாமம் அறியா ஏம வாழ்க்கை
- வடபுலம் வாழ்நரின் பெரி(து)அமர்ந்(து) அல்கலும்
- இன்நகை மேய பல்உறை பெறுபகொல்
- 15 பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ
- நெடுமண் இஞ்சி நீள்நகர் வரைப்பின்
- ஓ(வு)உறழ் நெடும்சுவர் நாள்பல எழுதிச்
- செவ்விரல் சிவந்த அவ்வரிக் குடைச்சூல்
- அணங்(கு)எழில் அரிவையர்ப் பிணிக்கும்
- 20 மணம்கமழ் மார்பநின் தாள்நிழ லோரே. (68)
- பெயர்: ஏமவாழ்க்கை
- துறை: செந்துறைப்பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கு
பாட்டு - 69
[தொகு]- மலைஉறழ் யானை வான்தோய் வெல்கொடி
- வரைமிசை அருவியின் வயின்வயின் நுடங்கக்
- கடல்போல் தானைக் கடுங்குரல் முரசம்
- கால்உறு கடலின் கடிய உரற
- 5 எறிந்துசிதைந்த வாள்
- இலைதெரிந்த வேல்
- பாய்ந்(து)ஆய்ந்த மா
- ஆய்ந்துதெரிந்த புகல்மறவரொடு
- படுபிணம் பிறங்க நூறிப் பகைவர்
- 10 கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே
- நின்போல், அசைவில் கொள்கையர் ஆகலின் அசையா(து)
- ஆண்டோ ர் மன்றஇம் மண்கெழு ஞாலம்
- நிலம்பயம் பொழியச் சுடர்சினம் தணியப்
- பயங்கெழு வெள்ளி ஆநியம் நிற்ப
- 15 விசும்புமெய் அகலப் பெயல்புர(வு) எதிர
- நால்வேறு நனம்தலை ஓராங்கு நந்த
- இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே. (69)
- பெயர்: மண்கெழுஞாலம்
- துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும்
- தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பாட்டு - 70
[தொகு]- களிறுகடைஇய தாள்
- மாஉடற்றிய வடிம்பு
- சமம்ததைந்த வேல்
- கல்அலைத்த தோள்
- 5 வில்அலைத்த நல்வலத்து
- வண்(டு)இசை கடாவாத் தண்பனம் போந்தைக்
- குவிமுகிழ் ஊசி வெண்தோடு கொண்டு
- தீம்சுனை நீர்மலர் மலைந்து மதம்செருக்கி
- உடைநிலை நல்அமர் கடந்து மறம்கெடுத்துக்
- 10 கடும்சின வேந்தர் செம்மல் தொலைத்த
- வலம்படு வான்கழல் வயவர் பெரும
- நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்
- புறம்சொல் கேளாப் புரைதீர் ஒண்மைப்
- பெண்மை சான்று பெருமடம் நிலைஇக்
- 15 கற்(பு)இறை கொண்ட கமழும் சுடர்நுதல்
- புரையோள் கணவ பூண்கிளர் மார்ப
- தொலையாக் கொள்கை சுற்றம் சுற்ற
- வேள்வியின் கடவுள் அருத்தினை கேள்வி
- உயர்நிலை உலகத்(து) ஐயர்இன்(பு) உறுத்தினை
- 20 வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
- இளம்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
- தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்
- மாடோ ர் உறையும் உலகமும் கேட்ப
- இழும்என இழிதரும் பறைக்குரல் அருவி
- 25 முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும்
- அயிரை நெடுவரை போலத்
- தொலையா(து) ஆகநீ வாழும் நாளே. (70)
- பெயர்: பறைக்குரல் அருவி
- துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
- வண்ணம்: ஒழுகு வண்ணம்
- தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பதிகம்
[தொகு]- மடியா உள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
- நெடுநுண் கேள்வி அந்துவற்(கு) ஒருதந்தை
- ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி ஈன்றமகன்
- நாடுபதி படுத்து நண்ணார் ஓட்டி
- 5 வெருவரு தானை கொடுசெருப் பலகடந்(து)
- ஏத்தல் சான்ற இடன்உடை வேள்வி
- ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
- மாய வண்ணனை மனன்உறப் பெற்றவற்(கு)
- ஓத்திர நெல்லின் ஒகந்தூர் ஈத்துப்
- 10 புரோசு மயக்கி
- மல்லல் உள்ளமொடு மாசற விளங்கிய
- செல்வக்கடுங்கோ வாழிஆதனைக்
- கபிலர் பாடினார் பத்துப்பாட்டு.
- அவைதாம்:
- புலாஅம் பாசறை, வரைபோலிஞ்சி, அருவியாம்பல், உரைசால் வேள்வி,
- நாண்மகிழிருக்கை, புதல்சூழ் பறவை, வெண்போழ்க்கண்ணி, ஏமவாழ்க்கை,
- மண்ஞெழுஞாலம், பறைக்குரலருவி. இவை பாட்டின் பதிகம்.
- பாடிப்பெற்ற பரிசில்: சிறுபுறமென நூறாயிரங்காணம் கொடுத்து நன்றாவென்னும்
- குன்றேறி நின்று தன்கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ.
- செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.