திருமுகப் பாசுரம்

விக்கிமூலம் இலிருந்து

மதிமலி புரிசை மாடக் கூடற்

பதின்மிசை நிலவும் பானிற வரிச்சிற

கன்னம் பயில்பொழில் ஆல வாயின்

மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்

பருவக் கொண்மூ படியெனப் பாவலருக்கு

உரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்

குருமா மணிதிகழ் குலவிய குடைக்கீழ்

சேருமா வுகைக்கும் சேரலன் காண்க

பண்பால் யாழ்பயில் பாணபத்திரன் தன்பால்

காண்பது கருதிப் போந்தனன்

மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருமுகப்_பாசுரம்&oldid=520646" இலிருந்து மீள்விக்கப்பட்டது