எனது நாடக வாழ்க்கை/பேய் வீடு

விக்கிமூலம் இலிருந்து



பேய் வீடு

சிவகங்கை, ஜமீனுக்குச் சொந்தமான நகரம். ஆங்கி லேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்த ராணி வேலுநாச்சியாரும், மருது பாண்டியர்களும் வாழ்ந்த பிரதேசம். அந்த ஊரில் கம்பெனிக்கு வீடே கிடைக்காமல் மிகவும் கஷ்டப்பட்டார்கள். கடைசியாகக் கொட்டகைக்கு அருகிலேயே ஒரு பெரிய வீடு கிடைத்தது. அது, சிவகங்கை அரண்மனைக்குச் சொந்தமான வீடு. அந்த வீடு, பல ஆண்டுகளாகப் பூட்டிக் கிடந்ததாகவும், அதில் யாருமே குடியிருப்பதில்லையென்றும் பேசிக் கொண்டார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்திலேயே மற்றொரு பெரிய வீடு பாழ டைந்து கிடந்தது. அதுவும் அரண்மனையைச் சேர்ந்த வீடுதான்.

கம்பெனியார் குடியிருந்த வீட்டில், ஏற்கனவே பேய்கள் குடியிருப்பதாகப் பலரும் சொல்விக் கொண்டார்கள். அந்த வீட்டில் இருந்த அரண்மனையைச் சேர்ந்த பல குடும்பங்கள் நசித்துப் போனதாகவும் கதை கதையாகப் பேசிக்கொண்டார்கள்

இந்தக் கதைகளை உறுதிப்படுத்தும் முறையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரு நாள் சுலோசன சதி நாடகத்தில் ஆதிசேடன் வேடம் புனைந்திருந்த பாட்டா இராமகிருஷ்ணன் தன் வேலை முடிந்து விட்டதால் சுவாமிகளிடம் சொல்லிவிட்டுக் கம்பெனி வீட்டுக்குப் போயிருக்கிறார். சமையல் அப்பாஜிராவிடம் சாப்பாடு போடச் சொல்லிவிட்டுப் புழக்கடைப் பக்கம் போனவர், எதிரே யாரோ ஒருவர் நிற்பதைப் பார்த்து, “யாரையா?” என்று கேட்டிருக்கிறார். உடனே திடீரென்று அந்த உருவத்தின் கண்களிலிருந்து நெருப்புப் பொறிகள் வீசவும், குள்ளமாக இருந்த உருவம் பெரிய பனைமரம் அளவுக்கு வளர்ந்து தலைவிரிகோலத் துடன் பயங்கரமாக நின்றதாம். இதைப் பார்த்த இராம கிருஷ்ணன், ‘ஐயோ’ என்று கூச்சலிட்டலறி அப்படியே சாய்ந்து விட்டாராம்.

நாடகம் முடிந்து எல்லோரும் வீடு திரும்பியதும் இச் செய்தியை அறிந்து இரவு முழுவதும் நடிகர்கள் உறக்கமே இல்லாமல் இருந்திருக்கிரு.ர்கள். இராமகிருஷ்ணனுக்குக் காய்ச்சல் கண்டுவிட்டது. ஒரு வார காலம் சிரமப் பட்டார். மறுநாள் தந்தையார் மூலம் இந்தப்பேய் விஷயத்தைக் கேட்டதும் தாயாருடன் தனி வீட்டில் இருக்க நேர்ந்ததற்காக நாங்கள் சந்தோஷப்பட்டோம்.

அதன்பிறகு கொட்டகையில் எப்போதும் பேய்க் கதைகள் பேசுவது சகஜமாகிவிட்டது. “நேற்றிரவு 12 மணிக்கு ஒருபெண் தலைவிரிகோலமாய் அழுது கொண்டிருந்ததை நான் பார்த்தேன்” என்பார் ஒரு நடிகர். “விடிய 4 மணிக்குப் பயங்கரமான சத்தம் மூன்று முறைக்கேட்டேன்” என்பார் மற்றொரு நடிகர். இப்படியே நாளடைவில் பேய்க் கலவரம் அதிகமாகி விட்டது. நகைச்சுவை நடிகர் ராமசாமி, ஒரு நாளிரவு வீட்டில் பேயாகவே நடிக்கத் தொடங்கிவிட்டார். அவரோடு சண்டைப் போட்டுக் கொண்ட இன்னொரு நடிகரைப் பயமுறுத்துவதற்கு இந்த பேய்க்கலவரத் தைப் பயன்படுத்திக்கொண்டார். அந்தவீட்டில் நெல் போட்டு வைக்கும் பெரிய குதிர் ஒன்று இருந்தது. அந்தக் குதிருக்குள்தான் இரவில் அடிக்கடி சத்தம் கேட்பதாகச்சொல்லிக்கொண்டார்கள். பயூன் ராமசாமி மிகவும் துணிச்சல் பேர் வழி. அவர் இந்தக் குதிருக்குள் ஏறி உள்ளே யிருந்து கொண்டு இரவில் பேயாக அலறத்தொடங்கினார். இரண்டொரு நாட்கள் இவ்வாறு அட்ட காசம் செய்து வந்தது ராமசாமிப் பேய். கடைசியாக ஒரு நாள் இரவில் திடீரென்று சுவாமிகள் விழித்துக் கொண்டார். குதிர் அசைவதைப் பார்த்தார். அவருக்கு உண்மை விளங்கிவிட்டது” பெரிய விறகுக்கட்டை ஒன்றைக் கையிலெடுத்துக் கொண்டு குதிர் அருகே வந்தார். “வா பேயே வெளியே” என்று கர்ஜித்தார். சுவாமிகளின் கர்ஜனையைக் கேட்டு நடுங்கிய பேய், வெல வெலத்துப் போய் வெளியே வந்தது. குதிருக்குள்ளிருந்து ஏறிக் குதித்த ராமசாமிப் பேயைக் கண்டதும் எல்லோரும் பயத்தோடு வாயைமூடிக்கொண்டு சிரித்தார்கள். அன்று பேய் சுவாமிகளிடம் நல்ல பூசை வாங்கியது.

சிவகங்கையில் வேறு வீடு கிடைக்காமையால் நாடகம் முடியும்வரை அந்தப் பேய் வீட்டிலேயே இருந்து காலம் தள்ளினார்கள்.

சுவாமிகளின் உறுதி

சிவகங்கையில் நாடகங்களுக்கு மற்ற ஊர்களைவிட அதிக மான வசூல். ஜமீன்தாரும் அடிக்கடி நாடகம் பார்த்து வந்தார். ஒருநாள் சதியனுசூயா நாடகத்தன்று ஜமீன்தார் வந்திருந்த பொது நடிகர்கள் சிலருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சங்கர தாஸ் சுவாமிகளுக்கும். ஒரு பரிசு .ெ கா டு க் க விரும்பினார் ஜமீன்தார். சுவாமிகளை மேடைக்கு அழைத்தார்கள். சுவாமிகள் எப்போதுமே மேடைக்கு வருவது வழக்கமில்லை. ஜமீன்தார் தமது திவான உள்ளே அனுப்பி சுவாமிகளை மேடைக்கு வந்து பரிசைப் பெற்றுக்கொள்ளுமாறு சொன்னார். திவான் வந்து சொல்லிய பிறகுங்கூட சுவாமிகள் பிடிவாதமாக மேடைக்கு வர மறுத்துவிட்டது எனக்கு நன்முக நினைவிருக்கிறது.

புகழ்பாட மறுத்தல்

நாங்கள் சிவகங்கைக்கு வருமுன் மதுரையிலிருந்தபோது இதைப் போலவே மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. அக்காலத்தில் தமிழறினார்களேயும் புலவர்களையும் ஆதரித்துப் போற்றி வந்த வள்ளல் இராமநாதபுரம் சேதுபதி மன்னார் அவர்கள், சுவாமி களைக் காண விரும்பினார். மன்னருடைய அரண்மனை நிர்வாகி ஒருவர் சுவாமிகளை அணுகி, “நமது சேதுபதி மன்னரைப் பாடாத புலவர்கள் ஒருவரும் இல்லையே! சுவாமிகள்மட்டும் ஏன் இன்னும் மன்னார்மீது பாடவில்லை? நேரில் வந்து ஒரு பாடல் பாடினல் தங்களுக்குக் கனகாபிஷேகம் செய்வாரே மன்னார்!” என்றார்.

சுவாமிகள் தொடக்க முதலே மனிதர்களைப் புகழ்ந்துபாடு வதில்லையென்று நோன்புகொண்டவர். ஆதலால் மன்னார்மீது புகழ்மாலை பாட மறுத்துவிட்டார். மீண்டும் மீண்டும் பல அன்பர்கள் வந்து இதுபற்றி வற்புறுத்தினார்கள். சுவாமிகள் சினம் கொண்டு, நானும் மறவன் மன்னனும் மறவன் என்னைவிட மன்னன் எந்த வகையிலும் உயர்ந்தவனல்லன் எதற்காக நான் அவனைப் புகழவேண்டும்? மன்னன்மீது பாடினால்தான் எனது. புலமை மன்னனுக்குப் புரியுமோ?” என்று கூறிவிட்டார்.

சுவாமிகளின் இத்தகைய தன் மதிப்பின் பெருமையும், நெஞ்சுறுதியின் அருமையும் எனக்குப் புரியவில்லை. புரிந்து கொள்ள இயலாத பருவம். இன்று அதன் சிறப்பை உணர்ந்து பெருமிதம் அடைகிறேன். சுவாமிகள் தமது வாழ்நாளில் இறுதி வரையில் ‘நரஸ்துதி’ பாடவேயில்லை என்பதை இங்கே மகிழ் வோடு குறிப்பிட விரும்புகிறேன்.

அன்னம் ஊட்டிய தெய்வம்

சிவகங்கையில் தாயோடு வசித்துவந்ததின் அருமை எனக்கு நன்முகத் தெரிந்தது. விருதுப்பட்டி, சாத்துரர் முதலிய ஊர்களில் நாடகம் முடிந்து வந்ததும் நான் அப்படியே உறங்கி விடுவேன் மதுரையில் நாடகங்கள் நடைபெற்றப்போது கூட வீடு தொலை விலிருந்ததால் பெரும்பாலும் வீட்டுக்குப் போவதில்லை. கம்பெனி வீட்டிலேயே படுத்துக் கொள்வது வழக்கம். சிவகங்கையில் தாயாருடன் தனியே இருந்ததால் நாடகம் முடிந்து வந்தவுடன் உறங்க முடிவதில்லை எங்கள் தாயார் பாற்சோறு பிசைந்து அதிலேகொஞ்சம் மோர் வி ட் டு வைத்திருப்பார்கள். நாங்கள் வந்தவுடன் அந்தச் சோற்றைப் பிசைந்து எங்களுக்கு உருட்டிப் போடுவார்கள், சுடச்சுட சுண்டக் கறியோடு அதைச் சாப்பிடும் போது தேவாமிருதமாய் இருக்கும். சில சமயங்களில் அவர்கள் சாதத்தைக் கொண்டு வருமுன் நான் உறங்கி விடுவேன்.

அன்னயார், உறங்கிய என்னை மடியில் போட்டுக்கொண்டு அன்னத்தை ஊட்டுவார்கள். நான் பாதி உறக்கத்திலேயே சாப்பிடுவேன். மறுநாள் காலேயில் எனக்கு இரவு சாப்பிட்ட நினைவே இராது “ஏனம்மா, என்ன எழுப்பிச் சாப்பாடு போட வில்லை?” என்று தாயைக் கோபித்துக் கொள்வேன். தாயார் சிரிப்பார்கள். “பெரியண்ணா ஏண்டா, துரங்கிக் கொண்டே சாப்பிட்டது நினைவில்லையா?” என்று கேட்பார். அப்போதுதான் எனக்குச் சாப்பிட்ட நினைவு வரும். அந்த அருமைத் தாயின் அன்பினை எண்ணி யெண்ணி இப்போது இன்புறுகிறேன்.

பட்டாபிஷேக நாடகம்

சிவகங்கையில் ஒருமாத காலம் நாடகம் நடந்தது. கடைசி பட்டாபிஷேக நாடகம் ‘பிரகலாதன்’ வைக்கப் பெற்றிருந்தது. நான் பிரகலாதனாக நடித்தேன். நல்ல கூட்டம். நாடகம் சிறப்பாக நடைபெற்றது.

நாடக சபைகளில் ஒரு வழக்கமுண்டு. கடைசி நாடகத்தன்று காட்சிகள் முடிய முடியப் பின்புறம் திரைகளை அவிழ்த்துக் கட்டி மறுநாள் பயணத்திற்கு ஆயத்தம் செய்துகொண்டே இருப்பார்கள். நாடகம் முடியுந் தருவாயில் முன்புறமுள்ள இரண்டொரு திரைகள்தாம் இருக்கும். அவற்றையும் மேலே பரண் மீதிருந்தபடியே சுருணையோடு சுருட்டிக் கட்டி வைத்து, மங்களம் பாடி முடிந்ததும், அப்படியே சுருணையோடு கீழே இறக்கி விடுவார்கள். இது சபையோருக்கு வேடிக்கையாக இருக்கும். மேலும் கீழுமாக சுருண்டு உயர்ந்து விழுந்து கொண்டிருந்த திரையை எதிர்பாராத விதமாகக் சுருணையோடு அப்படியே கீழிறக்குவதால், சபையோரின் கண்திருஷ்டி கழிந்து விடும் என்ற நம்பிக்கையும் இருந்தது.

பட்டாபிஷேக நாடகத்தன்று அந்த நாளில் எல்லா ஊர்களிலும் நடிகர்களுக்குப் பரிசு வழங்கும் வழக்கம் உண்டு. இந்த நாளில் அது மறைந்து வருகிறது. அந்த நாளில் ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் தாராள மனம் படைத்தவர்களாக இருந்தார்கள். அத்தோடு, விளம்பரப் பிரியர்களாக இல்லாமலும் இருந்தார்கள். யாருக்கு எங்கிருந்து பரிசு வரப் போகிறது என்பதே ஒருவருக்கும் தெரியாது. பரிசு கொடுப்பதற்காகவென்று எந்தப் பெரிய மனிதருக்கும் இலவசச் சீட்டுக் கொடுப்பதில்லை. நடிகர்களுக்கு நிறையப் பரிசுகளும் கிடைத்து வந்தன.

மறு பிறவி

நாடகம் முடிந்தது வழக்கம்போல் மங்களம் பாடுவதற்கு முன், பரிசு வழங்குவார்கள், ஒவ்வொருவராக மேடைக்கு வந்து பெயர்களைச் சொல்லிப் பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். பிரகலாதனுக்கு முடி சூட்டுவதோடு நாடகம் முடிவடைவதால் நான் முடி சூட்டிக் கொண்ட நிலையில் அப்படியே சிம்மாதானத் தில் வீற்றிருந்தேன். அன்று எனக்கும் இரண்டு தங்கப் பதக் கங்கள் பரிசாகக் கிடைத்தமையால் உற்சாகத்தோடு உட்கார்ந்திருந்தேன்.

என் தந்தையார் பின்பாட்டுப் பாடும் இடத்திலிருந்து உட்புறத் தட்டிக்குப் பக்கத்தில் வந்து, ஏதோ சைகை செய்து கொண்டிருந்தார். நான் தற்செயலாகத் தந்தையைப் பார்த் தேன். அவரது சைகையால் என்னைச் சிம்மாதனத்தின் கீழ்ப்படி யில் இறங்கி உட்காரச் சொல்கிரு ரென்பது புரிந்தது. காரணம் புரியாத நிலையில், நான் அவர் சொன்னபடி இருந்த இடத்தி லிருந்து ஒருபடி இறங்கி உட்கார்ந்தேன்.

அவ்வளவுதான். அடுத்த விநாடியில் என் தலைக்குமேல் கட்டப்பட்டிருந்த தர்பார் திரை அப்படியே சுருணையோடு ‘தடா’ ரென்ற சத்தத்துடன் விழுந்தது. என்மேல் விழவில்லை என்றாலும் அது விழுந்த அதிர்ச்சியால் நான் சுருண்டு விழுந்தேன் உள்ளே நின்ற தந்தையார் ஓடி வந்து, என்னை வாரியெடுத்து அணைத்துக்கொண்டார்.

ஒரு படி நான் கீழே இறங்கி உட்கார்ந்திராவிட்டால் என் வாழ்நாள் அன்றே முடிந்திருக்கும். தெய்வத்தின் திருவுள்ளம் வேறு விதமாக இருந்ததால் பிழைத்தேன். ஏதோ தற்செயலாக நான் கீழ்படியில் உட்கார்ந்ததாக எண்ணி, சுவாமிகள் ஆனந்தக் கண்ணிர் சிந்தி, என்னை வாழ்த்தினார் தெய்வம், தந்தையார் உருவத்தில் நின்று, என்னைக் காத்ததை அறிந்தபோது எல்லோரும் அதிசயித்தனார்.

என் தலைக்கு நேராகக் காட்சி அமைப்பாளர் ஒருவர், சுருணையோடு திரையைக் கட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த என் தந்தையார் ஏதோ எண்ணி, என்னைக் கீழிறங்குமாறு செய்தார் என்பதைப் பின்னல் அறிந்தேன். சில நிமிடங்களில் பரண் மீதிருந்து கீழிறங்கி வந்த காட்சியமைப்பாளர் திரு ராமசாமி என்னைக் கட்டியணைத்துக் கொண்டு, “மறு பிறவி எடுத்தாயே அப்பா” என்று கதறியழுத காட்சி, இன்றும் என் மனக் கண் முன்னால் நிற்கிறது.