எனது நாடக வாழ்க்கை/மூன்றாவது தமிழ் எழுத்தாளர் மாநாடு

விக்கிமூலம் இலிருந்து
மூன்றாவது தமிழ் எழுத்தாளர் மாநாடு


தமிழ் எழுத்தாளர் மூன்றாவது மாநாடு நாகர்கோவிலில் திரு. நாரண.துரைக்கண்ணன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.மாநாட்டை முன்னின்று நடத்திய அதன்செயலா வளர்கள், திரு வெ. நாராயணன், திரு பி.மகாலிங்கம் இருவரும் கோவைக்கு வந்திருந்தனார். மாநாட்டுக்கு நிதி சேகரிப்பதற்காக அவர்களோடு ஒருநாள் முழுதும் இருந்து உதவினேன். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் மாநாட்டை நடத்துவதில் மிகுந்த அக்கறையெடுத்துக் கொண்டார். அந்த மாநாட்டில் நான் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென்று கூறியிருந்தார். 12. 5. 48இல் நானும் தலைவர் ம.போ.சி. அவர்களும் கோவையிலிருந்து விமானத்தில் திருவனந்தபுரம் சென்று, அங்கி ருந்து நாகர்கோவில் போய்ச் சேர்ந்தோம். நான் விமானப் பயணம் செய்தது. அதுவே முதல் முறையாகும். 14- 5. 48 ஆம் தேதி காலே மாநாட்டில் கலந்து கொண்டேன். தலைமையுரை முடிந்து எழுத்தாள அன்பர்களின் சில சொற்பொழிவுகளும் நடந்தேறிய்பின் நாடகமும் பத்திரிகையும் என்னும் தலைப்பில் நான் பேசினேன். என் பேச்சு வருமாறு;

“அன்பர்களே நீங்கள் அறிஞர்கள். எதிர்காலத்தின் சிருஷ்டி கர்த்தர்கள். புதுயுகத்தை மலரச் செய்பவர்கள். உங்கள் பேனு முனேக்கு அணுகுண்டைவிட வலிமையுண்டு. உங்கள் முன்னிலை யில் நாடகக் கலையின் பயனைப் பற்றியோ, அதன் வளர்ச்சி நிலையைப் பற்றியோ, நான் அதிகமாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.

நாடகம் கலைக்கரசு; நாட்டின் நாகரீகத்திற்குக் கண்ணாடி: “பாமரமக்களின் பல்கலைக்கழகம்” என்பனவற்றை யெல்லாம் எழுத்தாளர்களாகிய நீங்கள் நன்கறிந்தவர்கள்.

நமது கவிமணி அவர்கள் ஈரோட்டில் முதலாவதாக நடந்த நாடகக்கலை மாநாட்டிற்கு ஒரு ஆசிச் செய்தி அனுப்பி யிருந்தார்கள். அதில்...... “ஆதிகாலத்தில் தமிழில் நாடகம் இருந்ததோ இல்லையோ என்ற ஆராய்ச்சி அவசியமேயில்லை. இப்பொழுது தரித்திரளுயிருக்கிற ஒருவன், அவனுடைய முப்பாட்டன் கப்பலோட்டி வியாபாரியாய் இருந்தான் என்ற கதையைக் கூறிக் கொண்டிருப்பதானால் யாதும் பயனுண்டா? தரித்திரன் முயற்சி செய்து குபேரன் ஆவதில் ஆட்சேபமில்லையே” என்று குறிப்பிட்டிருந்தார்கள். பொன்னான வார்த்தைகள்!

இன்றைய நிலையில் நாடக இலக்கிய வளர்ச்சிக்கு நாம் என்ன செய்ய வேண்டும்? எழுத்தாளர்கள் என்ன செய்யவேண்டும்? பத்திரிகைகள் என்ன செய்ய வேண்டும்? என்பனவற்றை ஆராய்வதில் செலவழிக்கும் பொழுதுதான் பயனுடையதாயிருக்கும்.

அன்பர்களே, இலக்கியத்துறையின் பல பிரிவுகளில் நாடகமும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்கள். கட்டுரை, சிறுகதை, நாவல் முதலிய இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகள் வளர்ச்சி பெற்று வருவது போல நாடக இலக்கியமும் வளர வேண்டும் என்பதுதான் உங்கள் கருத்தாக இருக்க முடியும். தமிழ் நாட்டில் நாடக நூல்கள் இப்பொழுதுதான் அரும்புகின்றன! இலக்கியச் சுவையுடைய எழுத்தாளர்கள் இப்பொழுது தான் இந்த உலகத்தில் நுழைய முயற்சி செய்து வருகிறார்கள்.

ஆனால், நாடக இலக்கியம் நூல் வடிவில் மட்டும் வளரும் இலக்கியமல்ல. படித்துமட்டும் ரசிக்கும் இலக்கியமல்ல. பார்த்து ரசிக்கும் இலக்கியம். அழகாக அச்சிட்டு வெளியிட்டால் போதாது. அரங்கத்தில் ஆடியாக வேண்டும். நாடக இலக்கியம் நூல்வடிவில் மாத்திரம் இருக்குமானல் அது வளர்ச்சிபெற்றதாக நாம் பெருமை பாராட்டிக் கொள்ள இயலாது.

இலக்கியப் பிரிவுகளில் நாடகம் தலைசிறந்ததாகவும் அதிகப் பயனுடையதாகவும் கருதப்படுவதன் காரணமே இதுதான்.

கண்ணால் பார்க்கும்போது ஏற்படக்கூடிய உணர்ச்சி காதால் கேட்கும் பொழுதோ படிக்கும் பொழுதோ ஏற்படுவதில்லை யல்லவா?

“ஒரு பொருளே, அல்லது தத்துவத்தை ஜனசமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டுமானல், கட்டுரை வாயிலாக, அல்லது சொற்பொழிவு மூலமாகக் கூறுவதைவிடக் கதை வாயிலாக, நாடகவாயிலாக வெளிப்படுத்துவது பெரும் பயன, அதுவும் உடனடியாகத் தருமென்பது என் கருத்து” என்று நமது தலைவர் திரு நாரண-துரைக்கண்ணன் அவர்கள் எழுதியுள்ளார். நமது புரட்சிக் கவினார் பாரதிதாசன் அவர்களும்,

“ஒரு நாட்டின் வேரிலுள்ள தீமை நீக்கி உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்பதற்கும், பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப் பிடித்த பிடியில் பிடித்துத் தீர்ப்பதற்கும், பெருநோக்கம் பெருவாழ்வு கூட்டுதற்கும் பிறநாட்டார் நாடகங்கள் செய்வார்” என்று கூறுகிறார். முடிவில் “எந்தன் திருநாட்டில் பயனற்ற நாடகங்கள் சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும்” என்று முடிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல் இது. இன்று தமிழ் நாடக உலகம் பூரணமாகப் பயனுள்ள வழியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. ஒரு எழுத்தாளன் தனது துறையில் உச்சநிலையடைய வேண்டு மென்றால்,அவன் ஒரு நாடகாசிரியகை முயற்சிக்கவேண்டும்.அப் போதுதான் பூரணத்வம் பெறுகிறான் என்பது அறிஞர்கள் முடிவு.

நாடகாசிரியனுக ஆகும்போதுதான் எழுத்தாளனின் கற்பனைகள் கருத்துக்கள் எல்லாம் பொது மக்களுக்கு நன்கு பயன்படுகின்றன. ஷேக்ஸ்பியர் மகாகவிதான். ஆனால், நாடகாசிரியர் என்ற பெருமைக்குள்தான் அவரது கவிதா சக்தி அடங்கி யிருக்கிறது. வங்காளக் கவினார் துவிஜேந்திரலால்ராய் அவர்கள் இலக்கியத்தின் பல பிரிவுகளிலும் புகுந்திருந்தாலும் நாடக ஆசிரியர் என்றே மக்களால் அழைக்கப்படுகிரு.ர். பேரறினார் பர்னட்ஷா அவர்கள் கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எல்லாம் எழுதியிருந்தாலும் பிரபல நாடாகாசிரியர் பர்னட்ஷா என்றே அழைக்கப்படுகிறார். நாம் வெகுதூரம் போகவேண்டாம். தோழர் அண்ணாத்துரை அவர்கள் நாடகாசிரியரான பிறகுதான் அறிஞர்

அண்ணாத்துரையென நம்மால் புகழப்படுகிறார். இதெல்லாம் எதைக் குறிக்கின்றது?... கட்டுரை, சிறுகதை, நாவல், எழுது வதைவிட நாடகம் எழுதுவ்து கஷ்டமானது என்பது மட்டுமல்ல: நாடகம் மக்களுக்கு அதிகப் பயனளிக்கக்கூடியது என்பதுதான் இதன் உண்மை.

அன்பர்களே, நாடகம் மட்டுமல்ல; பொதுவாக எந்தக் கலையை எடுத்துக்கொண்டாலும் அதன் குண தோஷங்களை ஆராய்ந்து பொதுமக்களுக்கு அறிவித்து, கலை வளர்ச்சிக்கு ஆதர வளிக்கும் பொறுப்பு இன்று பத்திரிகைகளிடம் இருக்கிறது. பத்திரிகைகள் நடுநிலையிலிருந்து விருப்பு வெறுப்பின்றி நன்மை தீமைகளை எடுத்துச் சொன்னல்தான் கதைகள் வளர்ச்சி பெறும்.

பகல் முழுவதும் உழைத்துவிட்டு அலுத்துப் போய் வரும். பாட்டாளிக்குச் சிலமணி நேரங்கள் சிரித்து மகிழ்வதுதான் இன்றையத் தேவையாயிருக்கலாம். வேடிக்கையாகப் பொழுது போக்க நாடகம்பார்க்க வருபவர்களுக்கு அரங்கத்திலும்அரசியல் பிரசாரம் செய்வது அவசியமில்லாததாகத் தோன்றலாம். மக்களின் உடனடித் தேவையைப் பயன்படுத்திக்கொண்டு அவர் களின் சிலமணி நேர மகிழ்ச்சிக்காக நாடகங்கள் நடைபெற்றால், போதாது.

மக்களின் வாழ்க்கைநிலை உயர, அவர்கள் நல்வாழ்வுவாழ, என்னதேவை? அவர்களுக்கு நாம் எதைச் சொல்லவேண்டும்? என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு கலைஞர்களிடம் இருக் கிறது. மக்களின் தேவையென்னவென்பதை அவர்களுக்கும். எடுத்துக்காட்டி கலைஞர்களுக்கும் எடுத்துக்காட்டி மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டும் கலைஞர்களே, கலைகளை, நாடகங்களைப் பாராட்டி ஆதரிக்கும்படிசெய்து, மக்களின் ரசனையை உயர்த்தும். பொறுப்பு, இன்று பத்திரிக்கைகளிடம் இருக்கிறது.

மக்களின் ரசனைக்குத் தக்கவாறு கலைகள் வளர்ந்தால் வளர்ச்சியில் வேகமிருக்காது. மக்கள் கீழே இருக்கிறார்கள் என்பதற்காக இலக்கியமும் கீழே இறங்கி விடாதபடி பத்திரிகைகள் கண்காணிக்க வேண்டும். மக்களுக்குப் புரிகிற பாஷையில் எழுதவேண்டும்; புரிகிற பாஷையில் பேசவேண்டும். புரிகிற பாஷை-புரிகிற பாஷை என்று உரையாடலின் தரத்தைக் குறைத்துக்கொண்டே போவோமானால் சின்னாட்களில் பாஷையே இராது. வேறு உருவத்தில் மாறிவிடும். குறிப்பிட்ட ஒரு நிகலயை நிர்ணயம் செய்துகொண்டு அந்த நிலைக்கு மக்களின் ரசனையை உயர்த்தவேண்டியது விமர்சகர்களின் கடமை. நாடகக்கலையால் மக்கள் திருந்தவேண்டும். மக்களின் ஆராய்ச்சி அறிவிகுல் நாடகக் கலை வளரவேண்டும்.

ஒருநாடகம் குறைந்தது ஒருமாத காலமாவது நடைபெறு கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் நாடகங்களைப் பார்க் கிறார்கள், நாடகப் பயன் மக்களைத் தவருன வழியிலும் திருப்ப லாம், நேரான வழியையும் காட்டலாம். இவ்வாறு மக்களைப் பாதிக்கும் ஒரு அறிய கலையைக் கலைஞர்கள் தவருண பாதையில் கொண்டு செல்லாமல் தடுப்பதும், கண்டிப்பதும், நேரான வழி காட்ட முயன்று ஆதரவு குறையுமானல் அவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பதும் பத்திரிகைகளின் கடமையல்லவா?... அலட்சிய மனோபாவம் காட்டி இதை புறக்கணிப்பது நாட்டுக்கு நலம் செய்வதாகுமாவென்று கேட்கிறேன். கண்மூடித்தனமான புகழுரைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாட்டுக்கு நன்மை பயப்பதாயின் பாராட்டுங்கள். சிறந்த அம்சங்களை எடுத்துக் காட்டி ஊக்கமளியுங்கள். தீமை செய்வதாயின் அதையும் எடுத்துக் காட்டித் திருத்துங்கள். நோக்கத்திலேயே பழுதிருந் தால் கண்டியுங்கள். குறை களைந்து தெளிவு பெறத்தக்க முறை யில் மக்களின் அறிவை வளர்த்து அவர்கள் ஆதரவு காட்டும்படி விமர்சனம் செய்யுங்கள் என்றுதான் வேண்டுகிறேன்.

விமர்சனங்களில் நேர்மையிருந்தால்தான் மக்களின்ரளிகத் தன்மை வளரும். மக்களின் ரஸிகத் தன்மை வளர்ந்தால் தான் கலைகள் பூரண வளர்ச்சி பெறும்.

கலைகள் இன்று தொழிலாகத்தானிருந்து வருகின்றன. சர்க்கார் கலைஞர்களை வளர்க்கவில்லை...... கலைஞர்கள் தங்கள் பிழைப்புக்கும் இதிலிருந்துதான் வழி தேடவேண்டும். ஆதலால் பொதுமக்கள் ரசனையைப் புறக்கணிப்பது சாத்தியமில்லை.

நாடகக் கம்பெனிகளின் இன்றையநிலையையும், அவற்றின் நிர்வாகக் கஷ்டத்தையும் அத்துறையிலீடுபட்ட ஒரு சிலர்தான் உணரமுடியும். யுத்தகால வருவாய் இன்றில்லை. சிலமாதங்களாக எல்லா நாடகக் கம்பெனிகளுக்குமே வருவாய் குறைந்துவிட்டது. ஆனால், செலவினங்கள் சிறிதும் குறையவில்லை...... ஆனாலும்

இன்று நடைபெறும் நாடகங்கள் பெரும்பாலும் நாட்டின் நிலையைச் சித்தரிப்பவையாகவும் சமூக முன்னேற்றத்திற்கு வழி காட்டுபவையாகவும் இருக்கின்றன. வெறும் பொழுது போக்கா யில்லை. புத்திக்கும் வேலை கொடுப்பவைகளாயிருக்கின்றன. ஆகவே, பத்திரிக்கைகள் இவற்றை போற்றி வளர்க்க வேண்டும்.

இந்தியா முழுவதும் பார்த்தாலும் நமது தமிழ்நாட்டில் தான் நாடகங்கள் சீரிய முறையில் நடைபெற்று வருகின்றன வென்று உங்கள்முன்னிலையில் நான் ஆணித்தரமாகக் கூறுகிறேன்: தற்புகழ்ச்சியல்ல, உண்மை. இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். எல்லாவகையிலும் தன்னைப் பற்றிக் குறைவாக மதிப் பிடுவதும், பிறரை, பிறர் பொருளை, பிறர் செயலை, பிறர் இலக்கியத்தைப் புகழ்வதுமே தமிழனின் நீண்டகாலப் பண்பாகி விட்டதென்று நமது ம.பொ.சி. அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். அது உண்மை...

நான் ஒரு ரஸிகன்: இலக்கியங்களை நன்றாக ரவிக்கத் தெரியும் எனக்கு. எனது ரஸிப்புத் தன்மையில் பூரண நம்பிக்கை வைத்திருக்கிறேன். ஒன்று கூற விரும்புகிறேன்.

ஹிந்தி, குஜராத்தி, முதலிய பிறமொழிகளிலிருந்து மொழி பெயர்த்த பல கதைகளை நான்படித்திருக்கிறேன். உண்மையாகச் சொல்லுகிறேன். குப்பை கூளங்கள் கூட மொழி பெயர்க்கப் படுகின்றன. பிறநாட்டு நல்லறினார்கள் சாத்திரங்களைத்தானே நமதுமகாகவி பாரதியார் மொழிபெயர்க்கச் சொல்லியிருக்கிறார். ........இதுபற்றி எனது நண்பர்களான சில எழுத்தாளர்களைக் கேட்டேன். என்னசார் செய்வது? மொழிபெயர்ப்பு நாடகங்கள் தான் சீக்கரம் விற்பனையாகின்றனவென்று பிரசுரகர்த்தர்கள் கூறுகிறார்கள் என்றார். தமிழ் மக்களின் தாழ்வு மனப்பான்மைக்கு வேறென்ன சான்று வேண்டும்?

இன்று தமிழுலகில் வெளி வந்துள்ள சிறு கதைகளையும், கவிதைகளையும் பிற மொழிகளில் பெயர்த்தால் தெரியும் தமிழனின் இலக்கியத் திறமை. அறிவிலும் கற்பனையிலும் தமிழன் யாருக்கும் இளைத்தவனல்ல என்ற உண்மையை அப்போதுதான் உலகம் தெரிந்து கொள்ளும். நம்மை நாம் குறையாக எண்ணா கிறோம் என்பதைச் சுட்டிக் காட்டதான் இதைக் கூறினேன்:

தமிழ் நாடக நூல்கள் அதிகமாக வெளிவரவில்லை. ஆனால், மேடையில் நாடக இலக்கியம் பிறமாகாணங்களை விடப்பெருமைப் படத்தக்க விதத்தில் வளர்ந்திருக்கிறதென்பதை மறுக்க முடியாது. படவுலகைவிட இன்று நாடக உலகம்தான் மக்களுக்குப் பயன்படுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை, சினிமா, நாடகத்தைவிட விரைவான பிரசாரக் கருவி என்பது உண்மையேயானலும் இன்று சினிமாவின் நிலை மக்களின் ஒழுக் கத்தைக் கெடுப்பதாய்த்தானிருக்கிறது. நமது கலைவாணரைப் போன்ற ஒருசிலர்தான் வருவாயை மதியாது வாழ்வை முன்னிலை படுத்திக் கலை வளர்க்க முடியும். தலை வாங்கி அபூர்வ சிந்தாமணிக்கும், சந்திரலேகாவுக்கும் மக்கள் காட்டும் ஆதரவைப் பார்த்த பிறகும்கூட நல்லதம்பியைப் போன்ற கதைகளைப் படம் பிடிக்க அபாரத் துணிச்சலும் தன்னம்பிக்கையும் வேண்டும்.

பொதுவாக படப்பிடிப்பாளர்களிடம் பயன் தரும் கதை. களை எதிர்பார்ப்பதில் பயனில்லை. படங்கள் பெரும் பொருட். செலவில் தயாரிக்கப்படுவதால் அவர்கள் அதிக வருவாயை எதிர் பார்த்து பொது ஜனங்கள் விரும்பும் அம்சங்கள் என்னென்ன என்பதைத் துருவித்துருவி ஆராய்ந்து அவ்வழியே சென்று கொண்டிருக்கிறார்கள்.

நாடகக் கம்பெனிகள் அவர்களைப் பின்பற்றவில்லை, ஓரள வுக்கு வருவாய் அவசியமென்றாலும் மக்களுக்குப் பயன் தரும் நாடகங்களை நடித்துப் புகழ் பெறவேண்டுமென்ற லட்சியத்துடன் தொண்டாற்ற முயல்கின்றன. இந்த வேற்றுமையை கவனித்துப் பத்திரிகைகள் தமது ஆதரவைக் காட்டவேண்டும். சமூக முன்னைற்ற நாடகங்களுக்குப் பத்திரிக்கைகள் அதிக ஆதரவளிக்க வேணடும்.

வார மலர்கள் வெளியிடும் தினசரிகள் நாடகச்செய்தி களுக்கும் விமர்சனங்களுக்கும் பக்கங்கள் ஒதுக்க வேண்டும். நாடக வளர்ச்சியை நாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பம்பாய், டில்லி மாகாணங்களில் நடிகர் “பிரதிவிராஜ்” அவர்களின் பிரசார நாடகங்கள் சிலவற்றிக்கு தமாஷா வரி இல்லையென்று அறிவிக்கப்பட்டிருந்ததை ஒரு வாரத்திற்கு முன் நமது தினசரிப் பத்திரிகைகளில் பார்த்தேன். அத்தகைய பிரசார நாடகங்கள் தமிழ் நாட்டில் நடைபெருமலில்லை; நடைபெறு

கின்றன. சர்க்கார் அவற்றில் கவனம் செலுத்தவில்லை. சர்க் காருக்கு நாடகப் பயனை எடுத்துக் காட்டி பிரசாரம் செய்ய செல்வாக்குள்ள தினசரி பத்திரிக்கைகள் முன்வரவில்லை. --

பத்திரிகைகள் மனம் வைத்தால்இன்று தமிழ்நாட்டில் நடை பெறும் பல நாடகங்களுக்கு தமாஷா வரி இல்லாமற் செய்ய சர்க்காரைத் துண்டலாம், தமாஷா வரி இல்லாதிருந்தால் நல்ல பிரசார நாடகங்கள் குறைந்த வருவாயிலும் அதிகநாட்கள் நடை பெற உதவி புரிவதாயிருக்கும். தமாஷா வரி விலக்கத்திற்காக வென்றே கல்விப் பிரசார நாடகங்கள் பல தோன்றக்கூடும். மேடை நாடகவளர்ச்சியும் இலக்கிய வளர்ச்சியில் ஒருபிரிவு என் பதைப்பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் உணர்ந்து செயலாற்றி ல்ை கலைவளரும்; நாடு நலம்பெறும்; இருக்கும் நிலையை எடுத்துக் கூறிப் பரிகாரம் பெறும் நோக்கோடு செய்யப்பட்ட எனது சொற்பொழிவைக் குறை கூறியதாகக் கருதவேண்டாமென்று உங்களைக்கேட்டுக் கொள்ளுகிறேன்:--

“வில்லேருழவர் பகை வரினும் கொள்ளற்க,
சொல்லே ருழவர் பகை”

என்பது நமது தமிழ் மறை...ஆகவே,சொல்லேருழவர் ஸ்தானத்திலிருக்கும் நீங்கள் பகையுணர்ச்சி கொள்ளாமல் எனது சொற் பொழிவின் கருப்பொருளை மட்டும் கருத்தில் கொண்டு நாடகக் கலைக்கு ஆக்கமளிக்குமாறு வேண்டுகிறேன்.”

மாநாட்டில் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.,ம.ப.பெரியசாமி, துாரன், கி. வா. ஜகந்நாதன், அகிலன், கவினார் புத்தனேரி ரா.சுப்பிரமணியன்,கவினார் தே.ப. பெருமாள் முதலிய பல்வேறு எழுத்தாளர்கள் கலந்துகொண்டார்கள். கலைவாணர் இல்லத் தில் பெரும்பாலோர் தங்கினார்கள். நாகர்கோவிலில் உள்ள எங்கள் இல்லத்தில் எழுத்தாள அன்பர்களுக்கு விருந்தளித்தேன்.

மறுநாளும் மாநாடு நடைபெற்றது. அன்றிரவு ஒரு பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார் கலைவாணர். 16.5.48இல் நானும் தலைவர் ம. பொ. சி.யும் புத்தேரி சென்று கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்களைப் பார்த்து வந்தோம். 18.5.48இல் நான் விமான மூலம் கோவைக்குத் திரும்பினேன்.