உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/தனிமை

விக்கிமூலம் இலிருந்து

19. தனிமை

உயர்ந்த எண்ணங்களை உடையோர் ஒருபொழுதும் தன்னித்தவராகார்.

-ஸ்ர்பிலிப் ஸிட்னி

கொள்கை உறுதியாயிருப்பின் தனிமையாயிருப்பது தனிமையாகாது.

-அனர்பாஷ்
தன்னந் தனியாய் நிற்பவனைவிட அதிகச் சக்தி வாய்ந்தவன் உலகில் கிடையாது.
-இப்ஸன்
உயர்ந்த எண்ணங்களின் தோழமை உடையோர் ஒருநாளும் தனிமை காண்பதிலர்.
-பிலிப்


தனிமையாயிருக்கச் சக்தி இல்லாததினாலேயே சகல துன்பங்களும் விளைகின்றன.

-லா புரூயர்

தனிமையாய் வாழ ஏன் நாம் அஞ்ச வேண்டும்? நாம் தன்னந் தனியாய் இறக்கத்தானே சர்வேச்வரனுடைய திருவுள்ளம்?

-கெபிள்

தர்ம நெறி தவறியவரே தனியாயிருப்பவர்.

-டைடெரெட்

எந்தக் காலத்திலும் அறிஞர்கள் ஏழைகளினும் அதிகமான எளிய வாழ்க்கையே வாழ்ந்துளர்.

-தோரோ

உலகத்தில் வெகு சிலரே தனியாக வாழத் தகுதியுடையவர். அவர்களுக்கு உலகத்தின் மாயையை அறியப் போதுமான லெளகிக ஞானமும், சகல மாயையையும் வெறுத்துத் தள்ளப்போதுமான அறவொழுக்கமும் இருக்கவேண்டும்.

-கெளலி

★ ★ ★