உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/புத்தகத்தால் பெறும் புகழ்

விக்கிமூலம் இலிருந்து

60. புத்தகத்தால் பெறும் புகழ்

பண்டிதர் என்பவர் படித்துப் படித்துக் காலத்தைக் கொல்லும் சோம்பேறிகளாவர்.

-பெர்னார்ட் ஷா

அயல் பாஷை எதுவும் அறியாதவன் தாய் பாஷையையும் அறியாதவனே.

-ஸெபயின்ட் பூவ்

பாண்டித்தியம் தலைக்குள் பல பொருள்களை நிரப்பும். ஆனால் அப்படிச் செய்வதற்காக அது மூளையை எடுத்து வெளியே எறிந்துவிடவும் செய்யும்.

-கோல்ட்டன்

பாண்டியத்தியமின்றி பாவனாசக்தி மட்டும் உடையவருக்குச் சிறகுகள் உண்டு. கால்கள் கிடையா.

-ஜூபெர்ட்

★ ★ ★