நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/உடன்படிக்கையால் ஏற்படும் நன்மை

விக்கிமூலம் இலிருந்து

127. உடன்படிக்கையால் ஏற்படும் நன்மை

குறைஷிகளுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் நிபந்தனைகள் வெளித் தோற்றத்தில் முஸ்லிம்களுக்கு சாதகமற்றவனவாகத் தோன்றலாம்; ஆனால்,

பெருமானார் அவர்கள் எதற்காக இந்தச் சாதகமற்ற நிபந்தனைகளை ஒப்புக் கொள்ள வேண்டும்? என ஒரு கேள்வி எழலாம்.

பெருமானார் அவர்களின் அறிவு சான்ற அரசியல் இங்கே சிறப்பாகப் புலப்படுகிறது.

குறைஷிகளும் முஸ்லிம்களும் நடத்திய பல போர்களில் முஸ்லிம்களே தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கின்றனர்.

எதிரிகள் வந்து முஸ்லிம்களைத் தாக்கினால், இஸ்லாத்துக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய அவர்கள் அனைவரும் தயாராகவே இருந்தனர். முஸ்லிம்களுக்கு “இத்தகைய நன்மைகள் இருந்தும், இவ்வருடம் ஹஜ் செய்யாமல் திரும்பிப் போவதற்குப் பெருமானார் அவர்கள் ஏன் சம்மதித்தார்கள்?" என்பது ஒரு கேள்வி.

குறைஷிகளுடன் போர் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதே பெருமானார் அவர்களின் முக்கிய நோக்கம்.

குறைஷிகளுடன் சமாதானம் உண்டானால்தான், அவர்கள் முஸ்லிம்களுடன் கலந்து பழகி, இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்வதற்குப் போதிய வாய்ப்பு உண்டாகும்.

ஆதலால், எவ்வகையிலாவது, குறைஷிகளுடன் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கருதி, பெருமானார் அவர்கள் மேற்படி நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு, குறைஷிகளுடன் சமாதானத்தை ஏற்படுத்தினார்கள்.

உடன்படிக்கையின் நிபந்தனைகளை உமர் அவர்களும் மற்றும் சிலரும் அறிந்ததும் மிக வருந்தினார்கள். ஆனால் ஹலரத் அபூபக்கர் அவர்களின் பொருத்தமான விளக்கம் எவ்வாறு இம்மனவருத்தத்தைப் போக்கிற்று என்பதைப் பின்னர் பார்ப்போம்.

இதுவும் இஸ்லாம் வெகு விரைவாகப் பரவி, வளர்ச்சி பெறத் துணை செய்தது.

இந்த உடன்படிக்கை, இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாகும்.