நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/பகைமை நீங்கத் திருமணம்

விக்கிமூலம் இலிருந்து

144. பகைமை நீங்கத் திருமணம்

கைபர் சண்டையின் போது, பலர் சிறைப்படுத்தப் பட்டனர். அவர்களில் ஸபிய்யா என்னும் பெண்ணும் ஒருவர். அவர் கைபரில் வாழ்ந்த யூதர்களின் தலைவரின் மகள். அவருடைய கணவரோ பனூ நலீர் கூட்டத்தாரின் தலைவர்.

சண்டையில் தந்தையையும், கணவரையும் இழந்து சிறைப்பட்ட அந்தப் பெண்ணை, பெருமானார் அவர்கள் விடுவித்து, ஆதரவற்ற நிலையில் இருந்த அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள்.

பெருமானார் அவர்கள், அவரைத் திருமணம் செய்து கொண்டதற்குக் காரணம் என்ன?

உயர் குடும்பத்தில் பிறந்த அந்தப் பெண் தம் தந்தையையும், கணவரையும் இழந்து ஆதரவற்ற நிலையில் இருந்தார் மற்றும்,

யூதர்களோ, முஸ்லிம்களிடம் கடும் பகைமை கொண்டிருந்தனர். இந்தத் திருமணத்தால், அவர்களுடைய விரோத மனப்பான்மை நீங்கும் என்று பெருமானார் அவர்கள் கருதினார்கள்.