நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்/முடிவுரை

விக்கிமூலம் இலிருந்து

16. முடிவுரை

அன்பர்களே! மேலும் உங்களுடைய அருமையான காலத்தை நான் வீணாக்க விரும்பவில்லை. பலப்பல பேசினேன். கேட்பதைக் கேட்டீர்கள். சிந்திப்பதைச் சிந்தித்து, அல்லன தள்ளி, நல்லன கொண்டு, நாட்டிற்கும், மொழிக்கும், மக்களுக்கும், சமூகத்திற்கும், சமயத்திற்கும் செய்ய வேண்டிய தொண்டுகளைச் செய்து, நீங்கள் சிறப்பெய்தி வாழ வேண்டுமென்று வாழ்த்துவதோடு எனது சொற்பொழிவை முடிக்கிறேன்.

வணக்கம்