பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

//

தனர், இவ்வாறு கூறுவதைத் தமயந்தி வளர்த்து வந்த கிளிகள் கேட்டு, அவையும் அவ்வாறே கூறத் தொடங்கின. இது நளனுக்குத் தெரியாதன்றோ !' ஆகவே, நளன் தன் உருத் தோற்றாத நிலையில் தமயந்தி இருந்த கன்னி மாடத்தில் வந்து தமயந் தியைக் கண்ணுற்று நின்ற தருணம், கிளிகள் தாம் தினமும் பயின்ற பழக்கத்தால் 'நளன் வந்தனன்; நளன் வந்தனன்' என்று பேசத் தொடங்கியதைக் கேட்ட ந ளன், உடல் துணுக்குற்று இக் கிளிகள் நம்மைக் கண்டு விட்டனவோ? என்று அஞ்சினான்.

தேவர் கள் நளனைத் தமயந்திடால் தூதனாக அனுப்பியது போதாது என்று, தனித் தனியே மாதர் நால்வரைத் தமயந்தியால் தூதுவராக விடுத்தனர். அவர்க ளும் தமயந்தியைக் கண்டு, அவள் அழகையுண்டு இவள் அழகினைக். கண்டால் இந்திராணி முதலிய தேவ மாதர்களும் வெட்கித் தலை குனிய வேண்டியது தான்! தமயந்தி யின் அழகுக் த முன் தேவ மர தர் அழகு, சூரியன் முன் சந்திரன் போன்றது" என்று வியந்து பேசினர். பின்னரித் தாம் வந்த காரியத்தினை இனிது முடிக்க வேண்டுமென்று உளம் கொண்டு, முதலில் இந்தி ரனால் ஏவப்பட்ட இந்திரன் துதி தமயந்தியை. நோக்கி, 'தமயந்தி(யே), கற்பக நிழலில் வீற்றிருந்து அரசு செய்யும் தேவர்களின் தலைவனான இந்திரன் தூதியான், இந்திரன் பெருமையைக் குறித்து இயம்ப' வேண்டாம். அவன் இந்திரலோகம் முழுமையும் தன் னதாகக் கொண்டு செங்கோல் ஓச்சுபவன். பகை. வரை வெல்லும் பலம் பொருந்தியவன். தேவர்கள்,