இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8
விடுதலை எதிரர்கள் ஐவர்
கம்பமென்ற சொல் கேட்டுக் கொதில் ஊழிக்
- கனல்புகுந்தாற் போல்துடித்தான்; கண்ணில் செந்தீ
கொப்பளிக்கக் கொதித்தெழுந்தான்; குலவை யிட்டான்;
- கும்பினியான் தனநோக்கிக் குமுற லானான்;
“கப்பமென்ற கேட்டிட்டாய்? நாளும் எங்கள்
- மாடுகளை ஏர்பூட்டிக் கழனி யாக்கிச்
செப்பரிய பாடுபட்டு, வியர்வை சிந்திச்
- செந்நெல்லும் தானியமும் விளைத்தோர் உன்றன்
முப்பாட்டன் பரம்பரையா? அன்றேல் நீதான்
- முதுகொடியப் பாடுபட்ட துண்டா ? எங்கள்
அப்பாணை சொல்கின்றேன்! கப்பம் என்றே
- அரைக்காசும் உன்றனுக்கு அளிக்க மாட்டோம்!
“உப்பிட்ட, வீட்டுக்கே கெண்டி தூக்கும்
- உலுத்தரைப்போல் உறவாடி எங்கள் நாட்டை
எப்படியோ தத்தளித்து வித்தை செய்தே
- ஏமாற்றிப் பறித்திட்ட திமிரால், கூலிச்
சிப்பாய்கள் பலமுண்டு , காலை நக்கிச்
- சேவிக்கும் அடியாட்கள் உண்டு, ஓட்டைத்
துப்பாக்கித் துணையுண்டு என்னும் தெம்பால்,
- துணிந்தென்னைக் கப்பமெனக் கேட்டாய் அன்றோ?
“பாட்டலத்தால் எமையடக்கி ஆள- வெண்ணும்
- பறங்கியரே! ஒருவார்த்தை பரஞ்சை என்றன்
குடைநிழலில் வாழுமட்டும், உடம்பில் சீவன்
- குடிகொண் டிருக்குமட்டும், மானத் தோடு