பக்கம்:இராவண காவியம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மற்றிவை யுரைக்க மன்னன் வசிட்டன்மன் னேவனைப் பார்த்துக் கொற்றவா ! அகத்துட் கொண்ட குறைதனை யொழித்தின் பாக்கும் நாற்றிற மதனை வேதம் நவின்றுள ததனை யானும் சொற்றிடக் கேட்பா யென்று சுவையுறச் சொல்ல லானான், 8. யாதெனில், பிள்ளை யில்லா ராங்கதை யடைய முன்னாள் வேதம் துரைத்த மேலோர் விளக்கமாய்ப் பின் னோர்க் காக ஓதியே வைத்துப் போனார் உரியதோர் குதிரை வேள்வி; கோதிலாய்! அதனைச் செய்து குலத்தினை விளக்கு வாயே. 10, மாமுனி யிதனைக் கூ ற மற்றவ ராமா மென்னத் தாமரைத் தாளைப் போற்றித் தசரதன் எந்தாய்; ஆக்கம் ஆமதைச் செய்யத் தக்கார் யாரென, மைந்தா! கேளும் கோமுனி யொருவ ருள்ளார் பெயர்கலைக் கோடராகும். என்னவே வசிட்டன் க ற எங்குளார் எனவே மன்னன், மன் னவ! அங்க நாட்டில் வாழ்கிறா ரெனவ மைச்சன், அன்னரை யானே சென் றிங் கழைத்துமே வருவே னென்று மன்னவன் கூறிச் சென்று முனிவனை யழைத்துவந்தான் , 12, மகப்பேறு குதிரை வேள்வி முற்றுற வசிட்டன் சொல்லும் வகைப்படி யமைச்சன் செய்ய; மன்னருக் கோலை போக்கித்; தொகைப்படு ம றவர் சூழச் சுற்றுற நாட்டை யெல்லாம் அகப்படப் பரியு மாங்கோ ராண்டினிற் சுற்றி மீண்ட. 13. அடைகரை யடையப் பாயும் அரும்புனற் சரயு வாற்றின் வட கரை யதனில் வல்லோர் வகுத்தனர் வேள்விச்சாலை; தடவரை யானை த் தானைத் தலைவரா மரச வெள்ளம் இடவரை யறையில் லாமல் இடந்தொறு நிறைந்த தம்மா !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/229&oldid=987734" இலிருந்து மீள்விக்கப்பட்டது