28. 28. விமாப் பட்சம் 25. கடித்துயிர் போக்கிடுங் கடிய பாம்பினை எடுத்தது நல்ல பரம் பென் று கூறல்போல், மடுத்திடப் பெற்றவர் வைத்த பேரினைக் கெடுத்தவன் பாம்பினுங் கேடு கெட்டவன். அறமலி தமிழர்கள் அன்பிற் றோன்றிய இறைமகன் றலை யொழித் திலங்கை வாழ்வினைப் பெறநினைந் தயலவர் பெட்பை நாடிடும் திறமிலான் தீங்கெலாஞ் செறிந்த சிந்தையான். 27. உதிரிய மா ன மும் உலர்ந்த நாணமும் முதிரிய வஞ்சமும் முறிந்த நெஞ்சமும் பதரினும் பதரினப் பகைவன் யாங்கணும் எதிரிலா தவன் றனித் திருக்கும் வேளையில், தந்தையின் பால்திரி சடையு மார்வொடு வந்தவன் இணையடி வணங்கி நின் றென. தெந்தையே! தாங்கள் நா னெ தனைக் கேட்கினும் மைந்துற வேயதை மறுப்ப தில்லையே? 28. இலையிலை மறுக்கிலேன் ஆவ தென்னெனக், கலைதெரி புலவர்கள் கருத்தைக் கொள்ளைகொள் மலைநிகர் வலியுடை வாலி தன் னை யச் சிலைவலான் கொன்றதாச் சீதை சொல்வினாள். 30. ஆமவன் வில்வலிக் களவு மில்லைகொல்! தாமரை மாலையான் சமரை வேண் டி டில் நாமதற் கென்செய்வோம் என்ன, தங்கையும் ஆமவன் பின்னவற் கரசு நல்கியே. 31. மற்றவன் படையொடிவ் விலங்கை மாநகர் முற்றுகை யிட்டிட முனைந்துள் ளானெனச் சொற்றனள் சீதையும் எந்தை சொல்றதாப்; பொற்றொடி வேண்டுமோர் பொருளு முண்டென, 26. எடுத்தல்-சிறபபி த் தல். மடுத்திட - அழைத்திட. 28. மைந்து-வலி. 31, எந்தை -இராவணன்,
பக்கம்:இராவண காவியம்.pdf/369
Appearance