பக்கம்:இராவண காவியம்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. போர்க் காண்டம் 1. அதிகாயன் தூதுப் படலம் வேறு 1. மடியினில் நெருப்புப் போன்ற வஞ்சக னுறவைக் கொண்டு கொடியவன் படையி னோடு குறுகிவிட் டதனைக் கணடாம்; நெடியவன் சொன்ன சொல்லை (நினைந்ததி காயன் றன்னைப் பொடியவன் றன்பாற் றாது போக்கின வாறு காண்பாம். 2. ஆரியப் படையி னோடும் அண்ணனைக் கொன்ற பாவி பூரியப் படையி னோடும் பூரியர்க் கடிமை யான பாரிடத் திணையி லைந்தாம் படையொடுஞ் சிலையி ராமன் ஊரினுக் கயலே தங்கி யுளனென வொற்றர் கூற. 3. கெட்டன னேனும் பாவம்! கிளையொடு சிறுவன் தாது விட்டுமே சொல்லிப் பார்ப்போம் வெறுத்துமே புணிவு தன்னைத் தட்டினா னென்னிற் கூர்வேல் தனக்கிரை தருவா மென்று மட்டவி மூலங்கன் மார்பன் மனத்திடை மதித்திட் டானே. 4. மனத்திடை மதித்த வாற்றை மதிவலி யமைச்சர்க் கோதத் தனித்தமி ழரசர் கோவே! தகுந்தகு மெனயா ரென்ன, அனைத்தையு முணர்ந்து கூற்று மமையதி காய னேயிவ் வினைத்திறத் தமைவா னென்ன வேந்தனுந் தகுந்தா ! னென்றே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/391&oldid=987903" இலிருந்து மீள்விக்கப்பட்டது