பக்கம்:இராவண காவியம்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாவா காவியம் 5. அவ்வேளையில் வடவாரிய னவனாரென வஞ்சன் ஒவ்வாமுறை யாலன்றெனை யோடென்றவ னினையோன், எவ்வேளையு முனை நம்பி யிருக்கின்றவன் முதியோன் இவ்வேளையி லிவனுக்கிணை யில்வென் றதும் வில்லோன். 6. எதிர்சென்றன னதுகண்டது மிடியேறென வுறுமிக் கதிர்வேலினுக் கெதிரேசுடு கணை தூவியே வருவோன் வெதிரும்படி யவனும் பெரு வில் வாங்கியே சுடுகோல் உதிரும்படி விடுமுன்னிவை யுரைசெய்குத லானான். 7. வடவாரிய வொருநாளிலும் வந்தோழிலை யுமது வடவாரிய மானாலுமுன் மரபோடும தையும் கடனாகவே தமிழோர் கொலை கைக்கொண்டனர் நீயும் படநாகம தானாயல பழியும்பல கொண்டாய். 8. பகையின்றியே யயலாரகம் பண்பின்றியே மன்னர் புகலாகுமோ? நாடோடிகள் போலப்புகுந் தாலும் தகையின்றியே யதையாளுவோர் தமரைக்கொலை செய்து வகையின்றியே பகைகொண்டலை மடவோர்களு முண்டோ ? புலையுண்பதும் பிறிதோருயிர் பொன் றப்புல மின்றிக் கொலை செய்வதுங் கூடாதெனல் குற்றங்குறை "யென்னில், அலையுண்டிடு முயிர்காவல ராவார்செல வின்றே சிலைவாவுல காள்வோர் கொலை செய்வோர்களோ சொல்லும்? ஒருகுற்றமு மறியாவெம துற்றோரையு முற்றோர் பருகுற்றன ரந்தோசுடு பகழிப்பகை யாலே, அருகுற்றது பிழையோமுதி யாளோடிளை யாளும் திருகுற்றிட வின்னாதென செய்தாரட பாவி 8, வெதிர் தல்-நடுங்குதல். கோல் அம்பு. 7. ஐ-தந்தை . அல-அது மட்டுமல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/460&oldid=1278773" இலிருந்து மீள்விக்கப்பட்டது