அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/பொறுப்பற்றவர்களின் போக்கு

விக்கிமூலம் இலிருந்து

(14) பொறுப்பற்றவர்களின் போக்கு


தீனபந்து ஆண்டட்ரூஸின் தந்தை, ஒரு சமயம் ரயில் நிலையத்தில் வாழைப் பழத் தோலால் சறுக்கி விழுந்தார். அதன் விளைவாகப் படுத்த படுக்கையாகி, பின்னர் மரணம் அடைந்து விட்டார். .

அது முதல், அவர் வாழைப் பழத்தோலை எங்கே கண்டாலும் அதை எடுத்து அப்பால் எறிந்துவிட்டுச் செல்வதே அவருடைய வழக்கம்

வாழைப் பழத்தைத் தின்று விட்டு, தோலை தெருவின் மத்தியில் எறியும் பொறுப்பற்றவர்களை இன்றும், எங்கேயும் காணலாம்.