அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/தமிழில் பேசி வெற்றி பெற்றார்

விக்கிமூலம் இலிருந்து


(40) மிழில் பேசி வெற்றி பெற்றார்


அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்கு இந்தியப் பிரதிநிதியாகச் சென்ற 'ஹிதவாதா' பத்திரிகை ஆசிரியர் ஏ.டி.மணி, அந்த மாகாணத்திலுள்ள அட்லாண்டா நகருக்குப் போயிருந்தார். அங்கே தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி எழுதுகிறார்:

வெள்ளையர் ஹோட்டல்களில் கருப்பர்களை அனுமதிக்க மாட்டார்கள் என்று முன்னரே எனக்குச் சிலர் எச்சரித்திருந்தார்கள்.

“நான் அட்லாண்டா நகருக்கு மாலைவேளையில் போய்ச் சேர்ந்தேன். எந்த ஹோட்டலுக்குப் போனாலும் வெள்ளையருக்கு மட்டும் என்ற பலகை வெளியே தொங்க விடப்பட்டிருப்பதைக் கண்டேன். ஆகவே, அன்று இரவு நான் பட்டினி கிடக்கும்படி நேரிட்டது.

“பசி காரணமாக என் மூளை தீவிரமாக வேலை செய்தது. ஒரு வழி தோன்றியது. மறுநாள் காலை, வெள்ளையர் ஹோட்டலுக்குள் சென்று, "எனக்கு ஏதாவது சாப்பிடத் தாருங்கள்” என்று தமிழிலே கேட்டேன். - -

நான் சொன்னது அங்கே இருந்த எவருக்குமே புரியவில்லை. ஆகவே, என்னை அயல்நாட்டார் என்று தெரிந்து கொண்டனர். என்னை வெளியே போகச் சொல்லாமல் உணவு பரிமாறினார்கள். அந்த நகரில், அந்த ஹோட்டலிலேயே தங்கினேன்.” .