அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்/விலை மதிப்பற்ற அம்சம்

விக்கிமூலம் இலிருந்து


(92) விலை திப்பற்ற ம்சம்



பாக்தாத் நகரில் ஞானி ஒருவர் இருந்தார். பலர் அவரிடம் போய் ஆலோசனை கேட்பார்கள். -

எவருக்கும் மறுக்காமல், அவரவர்களுக்கு ஏற்ற அறிவுரைகளை வழங்குவார்.ஞானி. ஆனால் யாரிடமும் வெகுமதி எதையும் பெற்றுக் கொள்ள மாட்டார்.

இளைஞன் ஒருவன். ஏராளமாகச் செலவழித்தவன். அதனால் ஒரு பயனும் அடையாதவன்.

ஒரு நாள் அந்த இளைஞன், ஞானியிடம் வந்து, “ஞானியாரே, நான் இவ்வளவு செலவழித்திருக்கிறேனே, இதற்கெல்லாம் பதிலாக நான் என்ன பொருளைப் பெறலாம்?” என்று கேட்டான். -

வாங்கி விற்கும் எந்தப் பொருளிலும், வாங்கிவிற்க இயலாத ஒர் அம்சம் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போனால், அந்தப்பொருளுக்கு ஒரு மதிப்பும் இல்லை” என்று கூறினார் ஞானி. -

"அப்படியானால் அந்த விலை மதிப்பற்ற அம்சம் என்னவோ?" என்று கேட்டான் இளைஞன்.

"மகனே! சந்தைக்கு வரும் ஒவ்வொரு பொருளிலும் அதை உற்பத்தி செய்தவனின் கண்ணியமும் நாணயமும் அடங்கியிருக்கும். அதுவே அதன் விலைமதிப்பற்ற அம்சம் ஆகும். எனவே, நீ ஒரு பொருளை வாங்குமுன், அதை உற்பத்தி செய்தவனின் பெயரைக் கவனி” என்றார் ஞானி.