பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

முதற் குலோத்துங்க சோழன்

தொழில் வரிகளையும் தன்னகத்து அடக்கிக்கொண்டு நிற்றல் காணலாம்.

கடன், கூலி, இறை, பாட்டம், பூட்சி என்பன வரிகளையுணர்த்தும் மொழிகளாம். கண்ணாலக்காணம் என்பது கல்யாணவரி என்றும் அது திருமண நாளில் மணமகனும் மணமகளும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய அரைக்கால் பணமேயாம் என்றும் ஈரோட்டி லுள்ள முதற் பராந்தக சோழன் கல்வெட்டு ஒன்று உணர்த்துகின்றது.[1]நாடுகாவல் என்னும்வரி பாடி காவல் எனவும் வழங்கும். இஃது ஊர்களைக் காத்தற்கு வாங்கிய ஒரு தனிவரியாகும். உல்கு என்பது சுங்க வரியாகும். ஈழம்பூட்சி என்பது கள் இறக்குதற்குச் செலுத்தவேண்டிய வரியாகும்.

6. நில அளவு :- ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஊர் களை முறையாக அளந்தாலன்றி அங்கு விளைநிலங்கள் எவ்வளவு உள்ளன என்பதும் அவற்றிற்குரிய நிலவரி பாகிய காணிக்கடன் குடிகளிடத்திலிருந்து அரசாங்கத் திற்கு எவ்வளவு வரவேண்டும் என்பதும் நன்கு புலப்பட மாட்டா. ஆதலால், சோழ இராச்சியம் முழுமையும், முதல் இராசராச சோழனது ஆட்சிக்காலத்தில் ஒரு முறையும், முதற் குலோத்துங்க சோழனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையும், மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறையும் அளக்கப்பட்டது.[2]


  1. 9. The Historical Sketches of Ancient Page 348. Dekhan,
  2. 10. Do. pages 357 & 358.