சொன்னால் நம்பமாட்டீர்கள்/பாரதி நிதி

விக்கிமூலம் இலிருந்து

பாரதி நிதி

ட்டயபுரம் பாரதி மண்டப நிதிக்காக கல்கி கிருஷ்ண மூர்த்தி அவர்களும் நானும் கோயம்புத்தூர் சென்றிருந்தோம். இலக்கிய ரசிகர்கள் நிரம்பிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டோம். ரசிகர்கள் நிதி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கூட்டத்திலிருந்த ஒரு ரசிகர்எழுந்து கல்கி அவர்களே. தாங்கள் எழுதும் ‘சிவகாமியின் சபதம் நீண்டு கொண்டே போகிறதே ?” என்று சொல்லிக்கொண்டு வரும்போதே நான் இடைமறித்து “ஆமாம், நீண்டு கொண்டுதான் போகிறது.

ஐயா, குரங்கிற்குத்தான் வால் நீண்டுகொண்டு போகக் கூடாது. மயிலுக்குத் தோகைநீண்டால் என்ன?” என்று ஒரு போடு போட்டேன். - -

அதைக் கேட்ட உடனே மேற்படி ரசிகர், “தங்கள் பதில் என்னைப் பரவசமடையச் செய்து விட்டது. நான் பாரதி நிதிக்குப் பத்து ரூபாய்தான் கொடுக்கலாம் என்று வந்தேன். இப்போது இதோ நூறு ரூபாய் கொடுக்கிறேன்.” என்று கூறி ரூ.100 பாரதி நிதிக்குக் கொடுத்தார்.