சீனத்தின் குரல்/நால்வர்

விக்கிமூலம் இலிருந்து

நால்வர்

இந்த நால்வரையும் சீன நாட்டின் எல்லைக்கோடுகள் என்றழைத்தால் மிகையாது. நால்வரும் நான்கு களங்கரை விளக்கமென விளங்கினார்கள். சீன மக்கள் தேடிப் பிடிக்க வேண்டிய கஷ்டமில்லா மல், தாங்களாகவே தாய் நாட்டுக்குச் சேவை செய்ய தயங்காமல் முன் வந்தார்கள். அதுவரை சீனத்துக்கு எவை எவை? தேவைப்பட்டனவோ அவ்வளவையும் இந்த நால்வர்களே தேடித் தந்தார்கள். நாற்றாண்டுக்கு ஒருவராக் பிறக்காமல், எல்லாரும் ஒரே நூற்றாண்டில். அதுவும் முற்பகுதி பிற்பகுதிகளில் ஒவ்வொருவராக பிறக்காமல் எல்லாரும் சம காலத் தலைவராகப் பிறந்தார்கள். கட்டடத்தை எழுப்பும் தொழிலாளிகள் அனைவருமே ஒன்று சேருவதைப்போல், இசையரங்கில் பல்வேறு வாத்திய விற்பன்னர்கள் ஒன்றாய்ச் சேருவதைப் போல், புரட்சி செய்யப் புறப்படும் மக்கள் கை கோர்த்து ஒன்றாய்க் கிளம்புவதைப்போல், புதிய சீனத்தைக் காண்பதற்காக நால்வரும் ஒன்றாய்த் தோன்றினார்கள். சீன நாடு பல நாட்களாகப்பட்ட கஷ்டத்தின் பலனாக இந்த நால்வர் கிடைத்தனர். நால்வரையும் ஒன்றாக சேர்த்துப் பார்த்தால் நான்கு பக்கங்களிலும் பட்டைத் தீட்டப்பட்ட ஒரே வைரக் கல்லைப்போல ஜொலித்தார்கள்.

1. அவர்களில் என் பூ, Yen-Fu, என்பவர் ஆதம் ஸ்மித், ஜோன்ஸ் ஸ்டுவார்ட் மில், என்ற நிபுணர்கள் எழுதிய பொருளாதார தத்துவங்களை. சீன மொழியில் மொழி பெயர்த்தார்.

2. லின்-ஷூ Lin-Shu என்பவர், சேர்லெஸ் டிக்கன்ஸ், சர்வால்டர்ஸ்கார்ட் என்பவர்கள் எழுதிய சமுதாய நூல்களை மொழி பெயர்த்து தந்தார். 3. லியாங்-சி. சியோ , Liang - Chi- Chio என்பவர், சமத்துவம், சுதந்திரம், ஜனநாயகம், பொதுக்கல்வி, உத்தரவாதமான பிரதிநிதித்துவக் குடியரசு என்பவைகளைப்பற்றி எழுதித் தந்தார்.

4. டாக்டர் சன் -யாட்-சன் மஞ்சு அரசாங்கத்தை ஒழிக்கும் விதத்தையும் அதற்காக ஏற்பட வேண்டிய பொதுவுடமைக் கொள்கை, நாட்டுப் பற்று என்பவைகளைப்பற்றி எழுதித் தந்தார்.

இந்த நால்வர் எழுப்பிய குரலோசையால் தத்துவத் தாகத்தையும், விஞ்ஞான விளக்கத்தையறிய வேண்டுமென்ற ஆர்வத்தையும் தூண்டியது. இதில் அரசாங்கத் தேர்வு முறையை அடியோடு ஒழித்து பள்ளிகளின் பாடபோதனை முறைகளை காலத்திற்கேற்றவண்ணம் மாற்றி அமைத்து, எவைகளை போதிப்பது, எப்படி போதிப்பது, பட்டம் பெறுபவரிகளுடைய அந்தஸ்தை உயர்த்துவது எந்தவகையில், இலக்கிய சுவை மிகுந்த பாடங்களையுண்டாக்குவது எங்ஙனம், பெண்ணடிமையை ஒழித்து, கன்பூஷியசத்தால் உண்டான மாற்றங்களை தற்காலத்துக்கேற்றவாறு மாற்றி, அறிவு சார்ந்த எண்ணங்களைத் தூண்டி. பெரியோர்கள், அதிகாரிகள், அறிவாளிகள் ஆகியோரிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டிய முறைகள், சட்டத்தை மதித்து, அரசாங்க ஊழியத்தில் எள்ளளவும் கடமை தவறாமல் நடந்து கொள்ளவேண்டிய பொறுப்பு, தனி மனிதன் செய்யும் குற்றங்கள் சமுதாயத்தைப் பாதிக்காமல் இருக்க வேண்டியதற்கான தற்காப்பு முறைகள் ஆகிய விதிமுறைகளைக் கொண்ட ஒரு அருமையான கல்விச் சங்கத்தை காண்டனில் Kantan சன்-யாட்.-சன் ஆரம்பித்து வைத்தார். அதன் தலைவராகவும் அவரே இருந்தார். அந்த சங்கத்தை அங்கீகரிக்க வேண்டுமென்று அன்றிருந்த மஞ்சு சர்க்காருக்கு ஒரு மனுவை அனுப்பி வைத்திருந்தார். அங்கீகாரமளிக்க மறுத்துவிட்டது சர்க்கார். இரண்டாவது முறையும் மனுவை அனுப்பி வைத்திருந்தார். அந்த முறையும் மஞ்சு மகாராணியார் அங்கீகாரம் அளிக்க முடியாதென கண்டிப்பாக மறுத்துவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சீனத்தின்_குரல்/நால்வர்&oldid=1073183" இலிருந்து மீள்விக்கப்பட்டது