அறிவுக்கு உணவு/பகைக்கு விதை

விக்கிமூலம் இலிருந்து

பகைக்கு விதை

பறங்கிக் கொடிக்குப் பறங்கி விதையும், பாகற்கொடிக்குப் பாகல் விதையும் வேண்டும் என்பது எல்லோரும் அறிந்ததே. மற்ற எல்லாச் செடிகளும் அதனதன் வித்தில் இருந்தே முளைக்கின்றன. “விரை ஒன்றுபோடச் சுரை ஒன்று முளைக்குமா?” என்ற பழமொழியும் இதை வற்புறுத்துகிறது.

ஆனால், ‘பகை’ என்னும் செடி ‘நட்பு’ என்னும் விதையிலிருந்துதான் முளைக்கிறது. ‘நட்பு’ என்னும் விதையின்றிப் ‘பகை’ என்னும் செடி முளைப்பதே இல்லை, என்று துணிந்து கூறலாம்.