அறிவுக்கு உணவு/என்ன பெயர்?

விக்கிமூலம் இலிருந்து

என்ன பெயர்?

தண்ணிர் ஊற்றி வளர்த்தவனுக்குப் பின் பலன் தராமல் வளைந்து சென்று, வேலிக்கு வெளியே தலையை நீட்டித் தேங்காயையும் மட்டையையும் வருவார்க்கும் போவார்க்கும் கொட்டி உதவுகிற தென்னை மரத்தை, அறிஞர் ‘முடத்தெங்கு’ என்பர். ஆனால், பெற்ற நாட்டையும் வளர்த்த மொழியையும் மறந்து, பிற நாட்டிற்கும் பிறமொழிக்கும் தொண்டு செய்கிற மக்களுக்கு என்ன பெயர் இடுவது?